கடைசி ஆசை!
மரணப் படுக்கையில் இறைவன் வரம் கொடுப்பதாக இருந்தால் ஒரே ஒரு முறை எப்படி எல்லாம் உன்னை அணு அணுவாய் காதலித்தேன் என்று உன்னை கடந்த காலத்திற்கு கூட்டி சென்று உன்னை கண்ட நாள் முதல் இந்நொடிவரை வேடிக்கை பார்க்க செய்ய வேண்டும் அது முடியும் நொடியில் உன் மடியில் மடிய வேண்டும்!என்றே கேட்பேன்!-
ஒரு கிலோ சர்க்கரைக்கு என்ன விலையோ அதே விலையில் தான் பில்
போடுவார்...
ஆனால் பையில் மட்டும் முக்கால் கிலோ...
காரணம் அது நியாயவிலை கடை!-
காதலே! காதலே!
குழந்தை கையில் தலைவெட்டி பூவாய் நான்! குழந்தையாய் நீ!என் தலையை வெட்டிவிட்டு சிரிக்கிறாய் நீ ! தலைவெட்டி வீழ்த்திய உனையே ரசிக்கிறேன் தரையில் வீழ்ந்த பின்னும் நான்!-
எத்துணை முறை தேற்றி
புதிதாய் மெழுகேற்றி வைத்தாலும்
உன் நினைவுகரையான் அரித்தே தின்றுவிடுகிறது
என் இதயத்தை!
-
கானகத்தின் மேலே இன்னும் சந்தேக கனலில் எரிவது கண்ணகிகள் தானே கண்ணம்மா!அது காட்சிபிழை இல்லை கண்ணம்மா ! காணும் கண்ணின் பிழை அன்றோடி!
சந்தேகத்திற்கு விளக்கம் கொடுக்காதே ! கைக்குள் எறும்பை மறைத்து கொண்டு வினவும் வினாக்களுக்கு நம் பதில்கள் யாவும் தவறே தானடி!
பதராய் உதிரும் வாழ்வில்
பறந்து செல்ல சிறகுகள் போதும் பெண்ணே! உன் மனசிறகை விரித்து விடு!
மணசிரைக்குள் சிதையாதே!
சிரையை உடைத்து பறத்தலால் பண்பாட்டுக்கு கலக்கம் இல்லையடி !
அது பெண் படும் பாட்டிற்கு எல்லையடி!-
கானல் நீருற்றி
கனவு பூக்கள் வளர்க்கும்
காரிகை கரத்தில்
கரிதுண்டும் கற்கண்டுகள்
என எறும்புகள் மொய்க்கும்!
-
எத்தனை உயிர்களை தின்றபின்னும் இறைவா இன்னுமா உன் பசி அடங்கவில்லை!
எங்களின் கண்ணீர் குடித்த பின்னும் இன்னுமா உன் தாகம் தணியவில்லை?
ஏனடா இந்த கோரதாண்டம்
தாங்குமா எங்கள் பூக்கோளம்?
போதும் இதை நிறுத்திவிடு
இருப்பவரை வாழவிடு!
நஞ்சையுண்டு காத்த நாயகனே
நாளும் எங்கள் கதறல் கேக்கலயா? நடபத்தை ரசித்திடும் ராட்சசனாய் உன் மனம் ஆனது எப்போது ?
யாவும் உன்னுள் அடக்கம் இன்னும் இதை நிறுத்த உனக்கென்ன தயக்கம்?
உயிர்தான் வேண்டும் என்றால் எல்லோரையும் ஒன்றாய் அழைத்துக்கொள்ளு ! நொடிக்கு நொடி நோய்பட்டு துடித்து இறக்கும் உறவுகளை இழந்து தவிக்கும் அவலம் வேண்டாம்!
ஒவ்வொரு உயிராய் கண்முன்னே பிரித்து எங்கள் உயிரை எரிக்காதே! தடுத்திட முடியாதென்றால் கருணைகொலையாய் எல்லோரையும் ஒன்றாய் கொன்றுவிடு!
இதயத்தின் மொழி(சந்தியா)
-
ஓயாத சண்டைகள் கேளிக்கைகள் பல ஆனாலும் ஒருவர் இல்லை என்றாலும் வீடு கலையில்லாதாக தோன்றும்!
தலையணை சண்டைகள், நிலாச்சோறு, பாட்டு போட்டிகள், சதுரங்கம் சீட்டாடம்,கேடம்போர்டு, பல்லாங்குழி, தாயம் என எல்லா விளையாட்டுகளை விடுமுறை நாட்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிடுவோம்!
தென்றலென சில துயரங்கள் அவ்வப்போது உரசி சென்றாலும் எப்போதும் இந்த வாழ்க்கை போதும்! இதைவிட சொர்க்கம் இல்லை !-
தீப்பெட்டிக்குள் அடங்கிய தீக்குச்சி போன்ற பெரிய குடும்பம் அல்ல!
பாட்டியின் முடியிட்ட முந்தானை சில்லறை போல நான் அம்மா அப்பா தங்கை என்று சுருங்கிய உலகம்!
ஆனால் அவ்வளவு அழகு!
எதுவுமே இல்லை என்றாலும் எல்லாம் இருப்பதாய் தோன்றும்!
கேளிக்கைகளுக்கும் சிரிப்புகளுக்கும் பஞ்சமில்லை!
அப்பாவின் கவிதைகளும் ,ஓவியங்களும் ஓயாமல் சிரிக்க வைக்கும் நகைச்சுவை புத்தகங்கள்! ஒருபோதும் சிரிக்க வைக்காமல் இருந்ததே இல்லை!கட்சி தாவல்களில் நானும் தங்கையும் கை தேர்ந்தவர்கள் அம்மாவின் அதீத கோபத்தின் போதெல்லாம் எதிர்கட்சிகளாகிவிடுவோம்!
ஓயாத சண்டைகள், நடனம்,பாட்டு என எல்லாவற்றிலும் பாட்னர் ஆகிவிடுவாள் தங்கை! நள்ளிரவிலும் நால்வரும் பழங்கதைகளையும் ,
பலகதைகளையும் கதைப்பதுண்டு!-
காலம் நிகழ்த்தாதவற்றை எல்லாம் சித்தரித்து நிகழ்த்துவதில் கனவுகள் சிறந்த இயக்குனர்கள்! ஆனால் அவர்களால் கூட என் காதலை சேர்க்க இயலவில்லை! இமைக்களுக்கு நடுவில் குண்டுசிகளாய் உன் நினைவுகள் நிற்க எப்படி உறங்குவது?
-