ஆயிரம் கவிதைகள் நெஞ்சுக்குள்
நீ கேட்ட இந்த நொடி கனத்துப் போனது என் இதயம்
காணாமல் போனது என் காதல் கவிதைகள்
காணாமல் போன என் காதல் கவிதைகளை
உன் கண்களுக்குள் தேடுகிறேன்
அது என் காதலைச் சத்தம் போட்டு முத்தமிட்டுக் கொண்டு இருக்கிறது
உந்தன் பரந்த மார்பில் என் உயிர் துளிகளைத் தூவியபடி
இனி உள்ளத்தோடு உயிராய் உன்னை ருசிக்க வேண்டுகிறேன்
உன் நெஞ்சோடு புதைந்து அன்போடு உனை ஆழம் பார்க்க வேண்டுகிறேன்
கடல் போன்ற உந்தன் ஆழமான அன்பில் மூச்சு முட்டும் வரை
உன்னோடு நீந்திக் கடக்க வேண்டுகிறேன்
நித்தம் நித்தம் முத்தம் சுவைக்க வேண்டுகிறேன்
உன் முகத்தோடு முகம் புதைந்து முழுமை பெற வேண்டுகிறேன்
இன்னும் வேண்டுகிறேன் இனியும் வேண்டுகிறேன் என் காதல் தெய்வம் உன்னை
கட்டியணைக்க, காதல் செய்ய, கவிதை பேச, முத்த பூக்கள் தூவி
நொடிக்கொரு பூஜை மணிக்கொரு அணைப்பு அடிக்கொரு முத்தம் என இதயக் கோவிலில்
உன்னை ஈரேழு ஜென்மம் இதழ்கள் பதித்து இமைக்குள் காத்து காதல் செய்ய வேண்டுகிறேன் !
என்னை ஏற்றுக்கொள் நொடிப் பொழுதில் உன் இமையோடு இதழோடு எனை ஈர்த்த உன் இதயத்தில் இதழ்கள் பதித்து நான் இருப்பேன்
இப்படிக்கு உந்தன் காதல் !
-