ஆறுதல் என்பதெல்லாம்,
ஒரு விதமான போதைதான்
அதில் சிக்கிக் கொள்ளாத வரை
மனம் சிரமப்படாது...
-
"அன்பானவர்களிடம்"
விட்டுக்கொடுங்கள்...
தோற்றுப்போங்கள்.
அது ... read more
பொய்கள்
ரசிக்கும்படி இருந்துவிட்டால் ,
உண்மைகளுக்கு
நம்பகத்தன்மை இருக்காதோ!
-
தென்றலைப் போல,
சிறந்த உளவாளி யாருமில்லை..
நீரைப் போல,
சிறந்த ஊடுருவி யாருமில்லை..
சூரியனை போல,
சிறந்த உழைப்பாளி யாருமில்லை..
நிலவைப் போல,
சிறந்த கொடையாளி யாருமில்லை ..
-
மனதிற்கு
விருப்பமான நபர் என்பதில் தொடங்கி,
எனக்கு விருப்பமில்லை என்பதற்கும்
இடைப்பட்ட பயணம்தான்
இந்த காதல் என்பதெல்லாம்......
-
பிரியம் என்பதெல்லாம்,
நீயும் நானும்
பிரியாதிருக்கும் வரைதானோ!
-
நீ என்னை நிராகரித்து விட்டால்,
என் ஆசைகள் அத்தனையும்
அனாதைகளே....
-
உன் விருப்பத்திற்கு மாறாக,
நான் செய்யக்கூடிய ஒரே தவறு
தொடர்ந்து
உன்னை காதலிப்பது மட்டும்தான்...
-
சின்னஞ்சிறு ஆசைகள்
உன்னுடையது எல்லாம்...
எனக்குத்தான் அதையெல்லாம்
நிறைவேற்ற தெரியவில்லையோ
என்ற பெரிய வருத்தம்
சூழ்ந்து விடுகின்றது.....
-
காற்று வந்ததும்,
இந்த
காதல் வந்ததும்,
மெல்லிய ஒரு பாடல்
நுழைந்ததும்,
நிஜமாய்
நான் அறியேன்...
கண்ணம்மா!
-