முன் அந்திச் சாரலும் ,
முற்செடியில் துளிர்த்த நெறிஞ்சியும்
அளவலாவவே விரும்பின ... ஆனால்
அதன் நிகழ்காலமோ ஒரு இரக்கமற்ற கோடை !!
-
கொங்கு தமிழ்
doctor 😇
சமீபத்திய என் புன்னகை , சோகம் ,மோகம்,கோபம் , குழப்பம் ,கவலை ,சிரிப்பு ,தவிப்பு, தலைக்கனம் அனைத்திற்குமான ஒற்றைக் கருப்பொருள் ;
பிறந்ததற்கு நன்றி மிகுந்த வருத்தங்கள் 😌 ...
You are the 'X' factor for my recent fluctuations of dopamine , serotonin and adrenaline ..
thankful condolences fr being born 😌..
-
அவளுக்கும் எனக்குமான போரில் அனலிடைப்பட்ட புழுவாய் சிக்கித் தவிக்கும் நான் ...
-
குலை முற்றி நெல் சாய ;
மழை கொட்டி நீர் பாய ;
நண்டு வளைச் சேறடைக்க ;
நதியெல்லாம் பெருக்கெடுக்க ;
வந்த சோலி முடித்து,
வளம் சேர்த்துப்
பிறந்தது தை ....-
மார்கழிக்கும் குளிர்பனிக்கும் ,
பத்தும் பொருந்தப் பார்த்து மழைமேளம் முழங்க
மணம் முடிச்சு வெச்சதாரு ?-
இவ்வுலகில் ஒவ்வொருவரின் சுயசரிதையும் தோல்வி , நகைச்சுவை,இன்பம்,சோகம், காதல் ,கூடல் , பிரிவு எனக் கலந்துகட்டி இயக்கப்பட்ட வணிக சினிமா போன்றது தான் ...
-
மணித்துளிகள் ,
"இறந்ததெதுவோ அதுவே சிறந்தது,
எதிர்வரும் புதிரே இன்பமானது,
நிகழ்வது என்றுமே இருண்டது,"
என்று நம்பவைத்ததெவர் ?
நிகழ்வது எதிர்காலத்திற்கிடப்படும் விதையாய் மட்டுமா இருக்க முடியும் !!
இறந்ததின் பலனாய் துளிர்த்த தளிராய் இருக்காதோ ?
நிகழ்காலத்தருணங்களில் இலயித்திருக்க எக்கணம் பழகுமிந்தப் பேதை மனம் ?-
காணல்நீராய் தோன்றி மறையும் தற்காலிக உறவுகள் ;
விழிநீர் உவர்ப்பென உணர்த்தவல்ல நித்திரையற்ற இரவுகள் ...
வயதின் ஓட்டத்தைக் கண்ணாடியாய் காட்டும் நரைகள் ; வாழ்க்கைநதியின் ஆர்ப்பரிப்பை அடக்க பொறுப்பெனும் பெயரால் கட்டப்பட்ட கரைகள் ...
என ,
முழுநிலவாய்த் தெரிந்த வாழ்வதன் #காட்சிப்பிழையைக் களைந்து அடுத்த கணம் நிச்சயமில்லாத தன் சுயரூபத்தை காட்டிநிற்கும் ...
ஆம், இது வாழ்ந்திருந்தவனை பிழைத்திருக்கப் பழக்கக் கூடிய வாலிபப் பருவம் ...
-
காஷ்மீர் முதல் குமரி வரை இந்தியா முழுவதும் மருத்துவனை அடிக்க மட்டும் ஒற்றுமையாய் கை ஓங்குகிறது ....
அடிவாங்கியவன் வேறு யாருமல்ல ;
பல போலிகளிடம் ஏமாந்து நோயை முற்ற வைத்து வேறு வழியில்லாமல் தன்னிடம் வரும் நோயாளியை மறுக்காமல், அறிவியலை நம்பி அனுமதித்து, சிகிச்சையளித்ததன் பரிசாய் ,நோய்த் தொற்றிற்கும் , நோயாளிகள் தாக்குதலுக்கும் உள்ளாகும் அதே அப்பாவி மருத்துவன்தான் ....
நோய்த் தொற்றிலிருந்து காக்கவுண்டு கவச உடை ;
சில மன நோயாளிகள் தாக்குதலிலிருந்து தப்பிக்கவுமுண்டோ உடை ? இக் கொடூரங்களுக்குமுண்டோ விடை ?
-