வரலாற்றை பேசினால் எதற்கு வரலாறு என்பான்.. வரலாறு தெரிந்தால் தானே வாழ்ந்தது தெரியும்.. வாழ்ந்துது தெரிந்தால் தானே இருந்தது தெரியும்.. இருந்தது தெரிந்தால் தானே இழந்தது தெரியும்.. இழந்தது தெரிந்தால் தானே எவன் அதை பறித்தான் என்பது தெரியும்.. வரலாற்றை நம்மிடம் மறைக்க பார்க்கிறார்கள் பொன்னியின் செல்வன் ஒரு புனைப்புக் கதை அவ்வளவு தான். வரலாற்று பதிவுகள் பார்த்தால் தெரியும் யார் ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள் என்று ஆயிரத்தில் ஒருவனிலோ பொன்னியின் செல்வனிலோ தமிழர்களின் வரலாற்றை தேடாதீர்கள். 🙏
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்தால் தான் தெரியும் அவனுடைய காயங்கள்!! தன்னை போல இருக்கும் ஒரு மனிதனை, தன்னை விடவும் கீழானவன் என்று நினைப்பது மனிதத்தை கொலை செய்வதற்கு சமம்.. அப்படிப்பட்டவர்களை நான் மனநோயாளியாகவே கருதுகிறேன்
பொன்னியின் செல்வன் என்பது சோழர்களின் வரலாறு அல்ல.. அது கல்கி எழுதிய ஒரு கற்பனை நாவல் அவ்வளவுதான். அதை படித்தவர்களுக்கு புரியும்!! படம் வரட்டும்.. மணிரத்தினம் மற்றும் அவரது உடனமைந்தவர்கள் எவ்வளவு திரிபு செய்திருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
இந்த பிறந்தநாளை ஓர் சாதாரணமான நாளாய் என்னால் கடந்துபோக இயலவில்லை.. எப்போழுதும் இருக்கும் பிறந்தநாளை விட இதை நான் சற்று வித்யாசமாகவே பார்க்கிறேன்!எண்ணற்ற செய்திகளை இந்த நாள் மூலம் நான் அறிந்தேன்!! எதிர்பார்த்த வாழ்த்துக்கள் எதுவும் பெரிதாக இல்லையென்றாலும் அவர்கள் சொல்லவரும் விடயத்தை நான் நன்குபுரிந்துக் கொண்டேன்!! புதிதாக 1000 வாழ்த்துக்கள் வந்தாலும்...! இந்த நாள் எனக்கு எண்ணற்ற அன்பைக் கொடுத்தாலும் நீங்கள் இருந்ததுபோல் எனக்கு சற்றும் இல்லை.....விட்டுவிடாமல் இருந்திருக்கலாம். நீங்கள் வேண்டுமானாலும் மறக்கலாம் நான் ஒருபோதும் நம் நினைவுகளை மறக்கவில்லை! நெஞ்சம் முழுவதும் நீங்கா வலிகளுடன் வாழ்த்திய வாழ்த்துசொல்லாத அனைவருக்கும் எனது நன்றிகளும் பேரன்புகளும்!
எந்த மக்களுக்காக நீ உண்மையாக இருக்க போராடுகிறாயோ அதே மக்களால் நீ விமர்ச்சிக்கப்படுவாய், நிராகரிக்கப்படுவாய்.... எங்களை நம்பி வாக்களித்த,வாக்களிக்காத யாவர்க்கும் ஒரு பிரச்சினை என்றால் முதல் குரலாக நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகளாய் எங்கள் குரல் முதலில் ஒலிக்கும்.
இந்த தேர்தல் அறிவித்த குறுகிய காலத்தில் *பொருளாதார சிக்கல் இருந்த நிலையிலும்* பல உறவுகள் பொருளாதார உதவி செய்து களமாடும் களப்பணியாளர்கள் சோர்ந்து விடாமல் இருக்க உதவினார்கள்.
களப்பணி செய்த உறவுகளும் கடினமான உழைப்பைக் கொட்டி நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாய சின்னத்தை வீதிகள் தோறும் வீடுகள் தோறும் கொண்டு சேர்த்துள்ளனர்.
*அவர்களின் ஆகச்சிறந்த களப்பணிக்கு புரட்சி வாழ்த்துக்கள்....*
இனம் ஒன்றாகும்... இலக்கை வென்றாலும்...
*ஒன்றுபட்டு வென்றெடுப்போம்....*
🔥 நாம் தமிழர் ✊🏿✊🏿✊🏿
தகவல் தொழில்நுட்பப் பாசறை துறையூர் சட்டமன்றத் தொகுதி!