பரணில் வைத்த
பாத்திரத்தை உருட்டும்
பூனை போன்ற
உன் நினைவுகளுக்கு
எந்தன்-
செல்லமான என் தந்தைக்கு லக்ஷ்மி 🤱🤱🤱பெற்று தந்த முத்தான முதல் புதல்வ... read more
உருகித் தொலைத்த
பனிக்கட்டியும் நீராய்
பருகிக்கொள்ளலாம்
மறுகி தொலைத்த
இந்நிமிடம் என்றும்
தருவிக்க முடியுமோ-
புதிதாய் ஒன்றும் எழுதபோவதில்லை
புனைந்த அத்தனை வரிகளிலும்
கருவாய் உனை வைக்க மறந்ததில்லை
உருவை கொஞ்சம் காட்டிவிடு அன்பே
திருவாய் மலர காத்திருக்கிறேன் நானும்
இரவை கொஞ்சம் துரத்திடுவோம் நாமும்
உறவை கொஞ்சம் வளர்திடுவோம்-
கோபம் வந்தால்
கொஞ்சிக்கொள்ள
மோகம் வந்தால்
மோதிக்கொள்ள
தாபம் வந்தால்
தாங்கிக்கொள்ள
ஊடல் வந்தால்
உரிமைகொள்ள
தேடல் பொழுதில்
தேவைகொள்ள
எந்தன் தேவியே
எங்கே நீ என்றே
தேடும் கண்களுக்கு
தேக தரிசனம்
தந்துவிடடி-
ஏதேதோ எழுதுகின்றேன்
எழுதி முடித்தவுடன்
எங்கேயோ தொலைத்து
ஏமாற்றிக் கொள்கிறேன்
என்னை நானே-
காதல் மொழிகளை தூவிவிட்டேன்
கண்களில் நீயும் காணும் நாளுக்கு
கண்மணியே நானும் காத்திருக்கிறேன்-
You feel it more when it’s gone,
A whisper lost in yesterday’s dawn.
What seemed so simple, slips through the soul,
Now echoes loud in every silent hole.
It’s in the leaving, love unfolds whole.
(புரியாத பிரியம் பிரியும் போது புரியும்)-