இலக்கு என்பது
இறுதியாக இருந்தால்
இதயத்திற்கு சுமைகளும்
சுகமாதே-
செல்லமான என் தந்தைக்கு லக்ஷ்மி 🤱🤱🤱பெற்று தந்த முத்தான முதல் புதல்வ... read more
You feel it more when it’s gone,
A whisper lost in yesterday’s dawn.
What seemed so simple, slips through the soul,
Now echoes loud in every silent hole.
It’s in the leaving, love unfolds whole.
(புரியாத பிரியம் பிரியும் போது புரியும்)-
வானிலவே உனை
கண்டதெல்லாம்
கனவில்தானடி...
பகல் நிலவாய்
உனைகாண
பலநாளாய் நானும்
காத்திருக்கிறேன்
வரும் கனவில்
வந்து நீயும் கொஞ்சம்
வரும் நாள் சொல்லடி-
எண்ணத்தில் உதித்த
என் வரிகளை எல்லாம்
திண்ணக்கமாக
தினம்தினம் சேகரித்து
திகட்டாமல் பதுகாக்கிறேன்
கானல் நீராய் என்றும்
கனவில் மட்டும் வந்து
காதல் செய்யும்
கண்மணியே உனக்காக-
ஆகாயத்து காவலனே
இன்னும் கொஞ்சம்
ஈரப்பதம் இருப்பதேன்
என்றே நித்தமும் நீ
ஏங்கி தவிக்கிறாயோ
உனக்கும் கொஞ்சம்
ஊன் பிண்டங்களால்
ஐயம் ஏதுமுண்டோ
ஒருநாள் மட்டும் நீயும்
ஓய்வு விட்டுவிடு
ஔடதம் தேடுகிறேன்
ஆயுதமாய் தாக்கும்
உந்தன் வெம்மைக்கு-
சொல்லாத காதலில்
சோகம் மட்டுமே
குடிகொல்வதில்லை
சொல்லிமாளாத
சொற்களால்
விளங்கமுடியா
விருப்பங்களும் உண்டு-
கண்கள் கண்டு பேசியதில்லை - அவள்
காணாத போது இரசிக்க மறந்ததில்லை
கைகள் கோர்த்து நடந்ததில்லை - அவளோ
கனவில் காதலிக்காமல் இருந்ததில்லை
காதல் மொழிகள் பேசியதில்லை - நானும்
காவிய காதலென்றும் சொல்லவில்லை - என்
கவிதை அவளின்றி இருந்ததில்லை - அவள்
கண்ணில் படும்படி இதுவரை வைத்ததில்லை
தொட்டு தொட்டு பேசியதில்லை - இக்காதல்
தொடரும் என்பதில் நிச்சயமில்லை - இருந்தும்
தொடர்ந்து நானும் காதலிக்கிறேன் - என்றும்
தொலையாமல் நினைவை சேகரிக்கிறேன்
தொலைதூர காதலானாய் நானும்-
என்னை பற்றி நினைக்கிறேன்
அப்பொழுதும் என்னை பற்றி நீ
நினைப்பாயா என்றே நினைக்கிறேன்-