"சாதிகள் இல்லையடி பாப்பா "
நானும் பாடுவேன்
நாளும் பாடுவேன்
நீங்கள் பாடுவீரோ..?
தாழ்த்தப்படுகிறோம் எனத் தவிதவித்து;
"தாழ்த்தப்பட்டோர்" பட்டியலில் மட்டும்
முதலிடம் கேட்பது தான்
சாதி தாண்டிய சமத்துவமோ ...🤔
ஒடுக்கப்படுகிறோம் என ஓலமிட்டு;
ஒவ்வொரு சலுகையும் பெற
ஒற்றைக் காலில் நிற்பதுதான்
வேற்றுமை களையும் வித்தையோ..🤔
பணம்படைத்தவன் மேலும் பலம்பெறுகிறான்..
ஏழையானவன் மேலும் ஏழ்மையடைகிறான்..
மாற்றங்கள் வேண்டும் இங்கே
சாதிகளை அழித்துவிட்டோம் என
நாம் மார்தட்டிச் சொல்வதற்கு ..
-பாரதி (Rushethra) 😎
- பாரதி (Rushethra)
18 DEC 2018 AT 17:29