கண்களைப் பார்த்து பேசென்கிறாய்;
முகத்தை நோக்கி கேளென்கிறாய்;
ஆனால்,
உன் கண்களைக் கடந்து,
உன் முகத்தைத் தாண்டி,
உன் பேச்சு
என் காதுகள் வழி
மூளையைச் சென்றடையும்
என்பதற்கெல்லாம் எந்த
உத்திரவாதமும் இல்லை!!-
வெளிப்படுத்த முடியாததன்றி,
வேறெந்த குறையுமில்லை,
நம் காதலில்!!-
வெளிப்படுத்த முடியாததன்றி,
வேறெந்த குறையுமில்லை,
நம் காதலில்!!-
அம்மாவைத் தேடி ஏங்கும்
பிள்ளையின் ஏக்கம்
ஆயுள் வரையில்
குறைவதே இல்லை!!-
விரும்பாத இந்த நாடகத்தை
வாழ்க்கை முழுவதும் நடத்த
வேண்டி சபிக்கப்பட்ட
உயிர்கள் நாம் இருவரும்!!-
விளக்கற்ற அறையும்,
விளக்கமற்ற வேதனையும்;
அழியாத அனுபவங்களும்,
அகலாத நினைவுகளும்;
விடியாத இரவுகளும்,
வடியாத கண்ணீரும்-எளிதில்
முடிந்துவிடும் வாழ்க்கையின்
முடிவற்ற வாடிக்கை!!-
தொலை தூரப் பயணங்கள் இன்னும்
தொலை தூரம் கேட்கிறது
உன் அருகில் !!-
அம்மாவின் வாசம் காற்றில்
மொத்தமாய் மறைந்துவிட்ட தூரம்;
அப்பாவின் சத்தம் சுற்றி
எங்கும் கேட்காத தூரம்;
உடன்பிறந்தோரின் நகக்கீரல்கள் ஆறித்
தழும்புகளாய் மாறிப்போகும் தூரம்;
வாழ்ந்த வீட்டின் தரைகளைப்
பாதங்கள் தொடமுடியாத தூரம்;
தொலைதூரம் சிறகடித்துப்
பறக்க முடிந்தாலும்,
மனதின் ஓரம்,
பெரும் பாரம், இத்தூரம்!!-
அம்மாவின் வாசம் காற்றில்
மொத்தமாய் மறைந்துவிட்ட தூரம்;
அப்பாவின் சத்தம் சுற்றி
எங்கும் கேட்காத தூரம்;
உடன்பிறந்தோரின் நகக்கீரல்கள் ஆறித்
தழும்புகளாய் மாறிப்போகும் தூரம்;
வாழ்ந்த வீட்டின் தரைகளைப்
பாதங்கள் தொடமுடியாத தூரம்;
தொலைதூரம் சிறகடித்துப்
பறக்க முடிந்தாலும்,
மனதின் ஓரம்,
பெரும் பாரம், இத்தூரம்!!-