நீங்காத நினைவு ஒரு நிழல் ஆகி போக 🌫 நீங்காத கனவு ஒரு இருள் ஆகி போக🌑 என் இரவின் நிலவாக நீ தானே வேண்டும்🌙 என் தீரா ஆசை அது நிறைந்தாலே போதும் 😊 உன் விரலோடு விரல் சேர்க்க வழி தானே வேண்டும் ❤ உன் மடி சாய்ந்து கதை பேச வரம் ஒன்று வேண்டும்🤷♂️ இதை எல்லாம் நான் கூற நீ கேட்க வேண்டும்😍 கேட்டு விட்டு உன் முடிவை நீ கூற வேண்டும்😇
அவன் வீசும் பார்வை.. எனை சாய்க்கும் காதல்..! அவன் கொள்ளும் மோதல்.. எனை வாட்டும் காதல்..! அவன் செய்யும் கொஞ்சல்.. எனை மாற்றும் காதல்..! அவன் கூறும் ஆறுதல்.. எனை தேற்றும் காதல்..!💞
என் கையில் என்ன இருக்கிறது என்கிறாய்... உன் கைகளின் ஸ்பரிசம் தரும் வெப்பத்தில் என் மொத்த வலிகளையும் எரிக்கும் சக்தி இருக்கிறதே...வேறென்ன வேண்டும் சொல்???
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் நீ என்னிடம் கேட்டாய்.. "இப்படி பேசிக் கொண்டே இருப்பது என்றாவது சலித்து விட்டால் என்ன செய்வாய்??"என்று..அப்போது சிறு வாக்குவாதம் கூட நடந்தது நமக்குள்.. நினைவிருக்கா?❤️
பேசுவது ஐந்து நிமிடமோ ஐந்து மணி நேரமோ..அது உன்னிடம் என்றால் எப்போதும் புத்துணர்வையே தரும்... அன்றோ இன்றோ என்றுமே முதலில் பூத்த மலர் போலவே தோன்றும்...தொடரும்💕💫