காற்றுக்குள் காணாமல் போ...
மின்னல் கீற்றில் மறைந்து போ...
இடி சத்தத்தில் இனிமை காண போ...
வயல் வரப்புகளில் வண்டாக போ...
நதிகளில் நடனமாட போ...
காட்டுக்குள் வெளிச்சமாக போ...
இயற்கையோடு இணைந்து போ...
உன்னையே மறந்து புது
உயிரை தேடி பயணம் போ...
க. ரேவதி-
காதல் கொண்டே
கவி எழுத தொடங்கினேன்
யாருக்காக இந்த மகளிர் தினம் ?
நேற்று சிதைத்து புதைக்கப்பட்ட
ஆர்திக்காவா...
இல்லை
நாளை சிதைக்கபடும்
பிஞ்சுக்காகவா...
க. ரேவதி
-
சில பயணம் அழகானது...
சில பயணம்
அர்த்தமானது...
சில பயணம் ஆழமானது...
சில பயணம் இதயத்தில்
இனைந்தது...
சில பயணம் ருசியனாது...
பயணங்கள் பலவனாலும்
பயணம் தரும் பாதிப்பு
ஒன்றுதான்..
க. ரேவதி-
சொல்லாத காதலில்
சொர்கமே கண்டான் அவன்
அவள் கண்களில் கானததை இவன் சொல்லாத காதல்
சொல்லி போனது
நீயில்லை என்றால் என்ன
என் என்னவளே
என் சொல்லாத காதல்
உன்னிடம் சொல்லிக் கொண்டு இருக்கும்
என் காதலை
காற்று உள்ள மட்டும் ...
க.ரேவதி
-
சாதி ஒரு புறம் அடிக்க..
நீட் என்ற பெயரில்
சடலம் அதிகரிக்க..
இடையில் வந்து
மாட்டிக்கொண்டு முழிக்குறது
பாடுபட்டு பெற்று தந்த
சுதந்திரம்....
க. ரேவதி-
திரையில் கனாததையும்
காணுவேன்..
கடல் மேலும் நடை போடுவேன்..
ரெக்கையின்றி வானில்
ரீங்கரமிடுவென்..
புல்வெளியில் பன்னீர் துளியாய் துளிர்வேன்..
கொட்டுமருவியில்
கொம்மலாம் போடுவேன்..
மல்லிபூவாயும் மலர்வேன்..
மரகதம் அள்ளி பூசிகொள்வேன்..
வெள்ளி நிலவோடு
விளையாடவும் செய்வேன்..
மனம் காணும் கற்பனைகளில்
நான்!!!
க. ரேவதி
-
வாழ்க்கை கற்று தந்தது
கஷ்ட்டதிலும் கண் கலங்காத
இன்னல்களையும்
இன்பாமக்கு
துன்பத்திலும் இதழ் மலர்ந்திடு
காயங்கள் கண்டாலும்
காட்டிக் கொள்ளதே
வெற்றி கண்டு மிகை கொள்ளாதே
தோல்வி கண்டு துவண்டாதே
எதுவாயினும் வாழ்கையை
வாழ மறக்காதே
காதல் செய்
நல்ல நட்பை பெரு
உன் வாழ்கையை மட்டும்
வாழ்...
க.ரேவதி
-
சொல்லில் அடங்காததையும்
சொல்லி விடுங்கள்
பின்
சொல்ல வேண்டிய நேரத்தில்
சொல்ல முடியாமலும் போகலாம்....
க. ரேவதி-