Take a breath...
Now, start again
-
but you never forget
that particular !✍ ... read more
எவ்வளவு தான்
நல்லவர்களாக
இருந்தாலும்...
நம்மள சுத்தியே
எல்லா கெட்டதும் வாழுது...
நல்லதே நினைச்சாலும்
அது கெட்டதா முடியுது...
எல்லாம் நம்ம
வாயில இருக்கு...
நம்மளே சும்மா இருந்தாலும்
வம்புல மாட்டிவிடுது...🤐
(நமக்குனே வருவாங்களா🙄)
(நாம் யாருக்கு என்ன
தீங்கு செய்தோம்)🙃-
அன்பாகவோ காதலாகவோ
அவனிடம் மட்டும் கொடுத்த
ஒன்றை மற்றவரிடம்
கொடுப்பதற்கு அது ஒன்றும்
விலைபொருள் அல்ல...!
ஆனால் அவனோ
அதை வெற்று பொருளாக
எண்ணி தூக்கி எறிந்து
விட்டான் மெல்ல...!
என் காதலுக்கு வரையறை
என்பதே இல்லை...!
அவனுக்கோ நான்
வேண்டாத தொல்லை...!
அவனை பொழுதும்
பார்ப்பதே போதும் எனக்கு...!
அவன் நினைக்கிறான் வேறு
வேலை இல்லை எனக்கு...!
கடவுளிடம் என்றும்
கேட்பது அவன் நலம்..!
அவன் என்னிடம் கேட்பது
விலகியே இரு எப்பொழுதும்..!
அவனுக்கு தெரியாது
என் வாழ்க்கையே
அவன் தான் என்று...
அவனை நீங்கி உயிர்
வாழ்வது எதற்கு..?-
அன்று அவன் என்னிடம்
காட்டிய காதலை...
இன்று அவன்
பிறரிடம் காட்டும் போது
வரும் வலி...
சொல்லவும் முடியாது !
சொன்னாலும் புரியாது !
#நான் இழந்த அவன் #
-
வழக்கமான நாளாக
அமையும் என்றே
தொடங்கியது...
நினைப்பது போலவே
எல்லாம் அமைவதில்லையே...
தாங்கி கொள்ள நினைக்கும்
ஒரு இதயம் !
தாண்டி செல்ல முயலும்
மறு இதயம் !
ஒரு பக்கம் அகங்காரம்
வென்றது...
அடங்காமல் சென்றது...!
மறுபக்கம் அன்பு தோற்றும்...
அங்கேயே எதிர்ப்பார்த்தும்
நின்றது !!
-