ரௌத்திரச் செல்வி  
22 Followers · 4 Following

Joined 4 October 2018


Joined 4 October 2018

இசையால் நினைத்து
கண்ணீரால் நனைக்க செய்தது
மட்டுமின்றி,
உங்கள் பாட்டுகளுள்
துளைய செய்துவிட்டு,
இப்போது எங்கோ
துளைந்து போய்விட்டார்..
உடலோடு உறவாடிய இசை
உயிரோடு கலந்து இன்று,
மோட்சம் பெற்றுவிட்டது..
தூக்கம் வராத பல இரவுகளில்
இசையால் எம்மை தூங்கசெய்துவிட்டு,
இன்று, நிரந்தரமாய் தூங்க
சென்றது ஏனோ?
உயிரை கொண்ட உடல்,
உம்மை விட்டு பிரிந்தாலும்
உயிரான இசைகொண்டு
வாழவைக்கிறோம்...
இசையோடு கலந்து உயிராக
மீண்டும் வந்திடுவீர்!!

-



காமத்தால் பல முத்தங்கள்
முகர்த்திடும் இவ்வுலகில்,
காம உணர்வை வீசி,
காதல் உணர்வை பூசி,
நெற்றி சூட்டில் நீ தரும்
ஒற்றை முத்தத்திற்கு ஏங்கி
நிற்கிறது.. இதயம்!!

-



சோதனைகள் பல வரும்..
உண்மை காதல்தானா?
என்று எண்ணிவிடாதீர்..
உண்மையான உறவுக்கு
மட்டுமே பரீட்சைகள்
பல வரும்..
அனைத்தும் உறவை
மேலும் பலமாக்க
படையெடுப்பவை!!
அன்பை கொண்டு
வெளுங்கள்!!

-



அன்பு கொண்ட மனதில்
ஆயிரம் எதிர்பார்ப்புகள்...
காதல் கொண்டு வாழும்
வாழ்க்கையில்,
அடுத்த நிமிடம் ஏதும்
நிச்சயிக்கப்படாத இந்த
வாழ்க்கையில்,
கடந்த காலத்தை
மட்டுமே திரும்பி
பார்க்க முடியும் இந்த
பயணத்தில்,
வாழும் இவ்வொரு
நிமிடமும், காதல்
நிறைந்த எதிர்பார்ப்புகளையும்
நினைவுகளையும் கோர்த்துக்கொண்டே
நாட்களை எண்ணி முடிக்க
நினைக்கிறன்..
ஏனோ தெரியவில்லை,
நாட்கள் மட்டுமே நகர்கிறது..
எண்ணிய எதிர்பார்ப்புகள்
என்றும் ஏற்கப்படுவதில்லை!!

-



சொல்லில் அடங்கி விடாது
பெண்ணின் அழுகைகள்,
சொல்லில் அடங்கி விடாது
ஆணின் வலிகள்,
சொல்லில் அடங்கி விடாது
சிலரின் எண்ணங்கள்,
ஆனால்,
எவ்வளவு சொன்னாலும்
அடங்காது, நம் மனதில்
சில நியாபங்கள்...
என்றும் நெஞ்சோடு
கலந்திருக்கும் நினைவு
சுவடுகள்...

-



இருள் சூழ்ந்த வானில்,
நிலவாக நானிருக்க
என்னை சுற்றிய நட்சத்திரங்களாய்
உன் நினைவுகள்...
நினைவுகளை எண்ணிக்கொண்டே
இருக்கிறேன்,
ஏனோ, எண்ணுக்குள்
அடங்க மறுக்கிறது!

-



உதிர்ந்துவிடும் என்று
தெரிந்தும்,
பூக்கள் பூத்து கொண்டே
இருப்பது போல்..
நடக்காது என்று தெரிந்தும்
என் சிறு எதிர்பார்ப்புகளை
முன் வைத்து கொண்டே
இருக்கிறேன்..
பூக்கும் பூ அனைத்தும்
வாடினாலும்,
வேர் பூக்களை மீண்டும்
பூக்கவைத்து கொண்டே
இருப்பதில்லையா?

-



ஏவுகணை நாயகனே,
உருவமாய் இருந்த நீர்,
உள்ளத்தில் உயிராய்
மாறிய நாள்,
நிஜமாய் இருந்த நீர்
நினைவாக மாறிய நாள்,
கதிரவனே இருண்ட நாள்..

-



வெறுமையான இரவு
வானில்,உன் நினைவுகள்
கொண்டு வர்ணம்
பூசுகிறது.. இதயம்!

-



ஒரு கண்ணில் நீர் வடிந்தால்
மறு கண்ணும் அழுவதுபோல்,
ஒரு கையால் முடியாதபோது
மற்றொரு கை உதவுவது போல்,
ஒரு கால் அடி எடுத்த போது,
மற்றொரு கால் பின்னே வருவதுபோல்,
உன்னை தவிர உன் வெற்றிக்கு
சிறந்த துணை யாருமில்லை!

-


Fetching ரௌத்திரச் செல்வி Quotes