எதிர்பாராததை எதிர்நோக்க வைப்பதே வாழ்க்கை தரும் சுவாரஸ்யம்... அதை ருசிப்பதும் ஏன் இப்படி என்று போனதையே நினைப்பதும் உன் விருப்பம்... என்ன செய்தாலும் வாழ்க்கை சுவாரஸ்யங்களை தந்து கொண்டே தான் இருக்கும் நீ தேர்ந்தெடுக்கும் பாதை ஏற்றவாறு சற்று மாறுதலோடு...
யார் நீ??? கனவிலே வந்தாய்!!! கள்ளத்தனமாய் சிரித்தாய்!!! உன் கைகளை நான் ஏன் பற்றி கொண்டேன்??? நீ முத்தம் கேட்கையில் ஏன் வெட்கம் கொண்டேன்??? யாரடா நீ??? கனவிலே கண்ட அறைகுறை முகம் மட்டுமாதானா??? இல்லை???
Unknown Person Unknown Person meaning in her dictionary: உன்னை தெரியாது என்பதெல்லாம் தெரியும் என்று அன்பு என்ற பெயரில் மேலும் உன்னை என்னை மேலும் வெறுக்க வைக்காமலிருக்கவே...
என்னை பிடிக்காத நீ எதற்கு எனக்கு??? என்று கம்பீரமாகத்தான் நடக்கிறேன்... அந்த கம்பீரத்தின் வலு ஒருசில விநாடிகளே என்பதை மறந்தே ஒவ்வொரு முறையும்... வலுவிழந்து குழந்தை போல் நீ வேண்டும் வந்துவிடு என்று மனம் அழும் போது மட்டும் ஒவ்வொரு முறையும் தோணும்!!! எத்தனை ஆழமடா நீ என்னுள்??? பதில் தெரியாமலே மீண்டும் தொடங்கும் அதே சுழற்சி... பாதை முடிவதற்குள் எத்தனமுறையோ இச்சுழற்சி??? தெரியவில்லை ஆனால் வலிக்கிறது!!!
என்ன சும்மா சும்மா நீ மாறிட்ட மாறிட்டனு... ஏன் நான் மாறக்கூடாதா??? எனக்கு இந்த மாற்றம் புடிச்சிருக்கு... உனக்கு என்ன இதில பிரச்சினை... நீ பார்க்கிற ஒரு பகுதி மட்டுந்தா என் வாழ்க்கையா??? மீதி பகுதி என்னவேனாலும் நடந்திருக்கலாம்... அத செல்லிட்டே திரியமுடியாது... முடிஞ்சா புரிஞ்சுக்க முயற்சி பண்ணு... இல்லா கிளம்பு... சும்மா சும்மா எப்ப பார்த்தாலும் நொய் நொய்னுட்டு...