தேடல் இல்லை
தேடல் தொடங்கிய
நேரத்தில் கனவுகள்
வருவதில்லை !!..
-
I am a teacher, mom, blogger...
இது மட்டும் தான் வாழ்க்கை
சில நிகழ்வுகளை
மனதின் ஓரத்தில் அடைத்து
வைத்து ஓசையின்றி
நடை பிணமாய் வாழ்வது ..
#இதுவும் கடந்து போகும் #-
கண்கள் குளம் போல்
காட்சி அளித்தாலும்
பாச பிணைப்புடன் பற்றிய விரல்களின் பிணைப்பை
தேடினாலும் கிடைப்பதில்லை,
-இறந்த பிறகு ..
அன்பை மட்டும் பரிமாறுவோம் #..-
சர சரவென நகரும்
காய்ந்த சருகுகளை போல
மனம் கசப்பான நிமிடங்களை
அசை போட்டுகொண்டே தான்
நாட்களை கடத்துகிறது !!!...-
மனதில் உள்ளவைகளை
மறைத்து கவி வடிக்க -
சிதறும் அச்சாணியின்
துளிகள் உண்மையை மறைக்க
ஏனோ மறுக்கின்றன !!!...
கவிஞனின் மனக்குமுறல் ..
-
வெறும் சுவரையும்
ஓடும் காத்தடியையும்
பார்க்கும் போது மட்டுமே புரிகிறது
வெறுமையின் விடையும்
கசப்பான நிமிடங்களின் தாக்கமும்
வாழ்வின் பக்கங்களில்
எழுத கதைகள் ஏரளமென்றும்!!!...-
வார்த்தைகள் தேடி
அலைகின்றேன் -உன்னை
வருணிக்க,
வெயில் இல்லா குளிருளினும்
உன் வருகை கிடைக்குமா
என்று கண்களை
விரித்து ஆராய்கின்றேன்..
சீக்கிரம் வா நடை போடலாம்!!!..
நிலாவும் நானும்!!..-
மட்டுமே
அன்பின் வெளிப்பாட்டின்
அளவுகோல் நீட்சியை
உணர முடிகின்றது...-