சிறு பிள்ளையாய் ஆட்டம் போடுகிறது உள்ளம்,
மழையை குடை பிடித்து கொண்டு கடந்து செல்லும் போது!
-
சிறு பிள்ளையாய் ஆட்டம் போடுகிறது உள்ளம்,
மழையை குடை பிடித்து கொண்டு கடந்து செல்லும் போது!
-
நினைவிருக்கும் வரை நீ என்னுடன் இருக்க வேண்டும்!
என்னுடன் இருக்கும் வரை எனக்கு நினைவிருந்தால் போதும்!-
உன் விரல் கோர்த்து நடக்க ஆசை பாதை கடக்கும் வரை அல்ல என் வாழ்க்கை பயணம் முடியும் வரை
-
பேருந்து காதல்
எனக்கு முதல் அறிமுகம் அவளின் ஒற்றை கூந்தலை தாங்கி இருக்கும் காது மடல்களை!
எனக்காகவும் இந்த உலகில் ஒருவர் இருக்கிறார் என்ற ஏக்கம் தீர்ந்தது முதல் பார்வையை என்மீது அவள் வைத்த போது!
ஜன்னல் ஓரம் அவள் இருக்கையில் அமர்ந்து கொண்டு வருவாள் அவளது தாவணி பின் அமர்ந்து இருக்கும் எனக்கு தாலாட்டு பாடும்!
பேருந்து தூக்கத்தில் இருந்து என்னை சோம்பல் முறித்து எழுப்பிவிடும் அவளின் காது ஜிமிக்கியில் பட்டு வரும் ஒளி எனக்கு இன்னொரு சூரிய உதயம்!
அவள் விரல் பட்டு வந்த பேருந்து டிக்கெட் இன்று வரை எனது வீட்டு பொக்கிஷ அலமாரியில் என் காதல் சின்னமாக காத்திருக்கிறது!
பயணம் முடிந்தும் பயணிக்கும் இந்த பேருந்து காதல் சிலருக்கு சுகமானது, சிலருக்கு சுமையானது-
மௌனம் பழகு
உன் இதழ்கள் சுமக்கும் மௌனத்தை உன் விழிகளுக்கும் கற்றுக் கொடு!
ஏனெனில் உன் இதழ்களை விட உன் விழிகள் பேசுவதை அதிகம்!-
நெருக்கமான உறவினர் இறந்து விட்டார் என்று இறப்பிற்கு சென்றேன் அங்கு வந்த இறந்தவரின் உறவினர் வந்தவுடன் என்னிடம் கேட்டார் "Body" எப்போ எடுப்பாக என்றார்.
அவ்வளுதானா இந்த வாழ்க்கை!-
என் வாழ் நாள் தேடலிலே கிடைத்த மிகச்சிறந்த பரிசு உன் ஞாபங்கள் மற்றும் நீ தந்த நினைவுகள் மட்டும் தான்
-