ஓயாமல் மோதிக்கொள்ளும்
கடலும் கரையும்;
தொய்வுறாமல் வளர்கின்றது
பல காதல்களையும்!
-
இன்பங்கள் ஆயிரம் ஆயிரம்,
துன்பங்கள் எண்ணி வாடுது பாழ்மனம்,
ஆசை வலையில் மாட்டிக்கொண்ட மீன் இனம்,
இந்த சாபத்தில் இருந்து பிழைக்குமோ மானுடம்?-
அன்பு மடல் வடித்தேன்,
"காதலா?"என்றனர்.
ஆசை கவிதை வரைந்தேன்,
"காமம் போலும்!" என்றனர்.
உள்ளதை உள்ளபடி எழுதினேன்,
"அரசியல் பேசுகிறாள்!" என்றனர்.
சரி உள்ளதை மாற்றி எழுதினேன்,
"இது வெறும் கற்பனை" என்றனர்.
அதனால்தான் சொல்கிறேன்...
"இந்த கவிதை நான் புனையவில்லை"
-இப்படிக்கு நான்!-
பக்கத்து வீட்டுக்காரியிடம்,
"வெளியூர் செல்கிறேன்.
என் செடிகளை கொஞ்சம்
பராமரித்துக்கொள்"
என்று சொல்லும் செயலுக்கு
காதல் என்று பெயர்!-
காதல் கானம் இசைக்கையிலே,
காமம் கொஞ்சம் ஏறயிலே,
மணிக்கணக்காய் பேசயிலயே,
அறியா பல செய்தி சொல்லையிலே,
சாந்தமாய் இரவு படுக்கயிலே,
சுவாரசியம் கொஞ்சம் கூடயிலே,
அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பில் புரிந்தது
என்னவளும் வானொலியும்
ஒன்று என்று!-
கவிதை எழுதி
காகிதம் மடித்து
கப்பல் விட்டேன்
மூழ்கியது கப்பல்
நினைவுகளின் பாரம்
தாழவில்லை போலும்!-