தோன்றின் ஒளி தூளி செய
தென்றலானேன்,
கொண்டேன் மது வெண்ணிலவில்
சேரலானேன்,
வெள்ளி உமிழும் மூச்சினாலே
மேகமதில் நீச்சலிட்டேன்,
அங்குமிங்கும் மிதந்தே
வான தறியிலொரு பட்டுக்
கோர்த்தேன்,
மிஞ்சியிருக்கும் ஆசையினூடே
மிஞ்சலில் ஒரு புடைவை
நெய்தேன், அதை வேண்டாத
அவள் கொஞ்சலில்
என்னுடனே!!


-



என் அன்புக்கு
விரிவுரை
தேவைப்படாது,
என் கோவத்தின்
காரணங்கள்
அளவில்
அடங்காது!!

-



இலகுவாய்
சிக்கப்பட்ட
திறந்த இதயத்தின்
அன்பின் பகிரல்கள்
யாவும் தகுதி கொண்டு
பகிரப்பட எண்ணினால்,
அல்லார் தகுதி எனில்,
அத்தனையும் ஆரம்பத்திலேயே
அறுத்தல் சிறப்பாம்,
தேவைக்கு துணையேற்றல்
ஒவ்வா கசப்பாம்!!

-



angry on nose,
Tears on eyes, like
Decodes are opened.
While believable person
If not understand,
I tries to settle with
Stone heart,
No reaction with.

-



சுய ஒழுக்கப் பாடத்தின் ஆசான்,
அதனால் புத்தகத்தின் மேல்
திருட்டு செயலைக் காட்டாதீர்.

(சமீப அனுபவம்)

-



பொல்லாத திருடன்
அவன் கவிஞன்,
புழு தன் திறமையை
மண் தோன்றும் அதையும் விடமாட்டான்,
முத்தொன்றின்
அழகை மறைத்து
சிப்பியது ஆழி புதைந்தால்
அதையும் மொழியாக்குவான்
அட இவன் தானே கவிஞன்!!

-



கட்டாயத்தில்
மறக்கப்பட்டவைகளில்
மறித்திடாமல்
மறைந்திருக்கும்
அந்த நாள்
படிவத்தின்
நிறம் !!!

-



இன்ன பிற
என்பவர்களில்
சில
வெளிர்த்தன்மையிலான
மகிழ்ச்சி நிலவுகிறது.
கருத்தொன்றாத
மனம் பொருந்தாத
உறவுகளுக்கு
அப்பாலும்,
சிறுநகையில்
இணையும்
அப் பிறர் சொற்கள்,
அடுத்த நொடிக்கு
உயிரைக் கடத்தும்
உந்துவிசையென.

-



ஒரு கிளையின்
மந்திரம்
என்பது
தோன்றிக் கிடக்கும்
இலையின்
உதிர்விற்கு
பின்னரும்
நினைவாய்
இலையின்
தழும்பைக்
கிளையும்
தாங்கியிருத்தல்,
சில உறவும்
அவ்வாறு
நிலைத்தலே
இப்பூமியின்
இயக்கத்திற்கு
சாட்சி!

-



புகழ் தேடி ஓடும்
மனம்
எப்பொழுதும்
அடுத்தவர்
அடைந்த
புகழின் எல்லை
நோக்கும்,
தனித்துவ பாதையின்
பயணமே
வெற்றி என்பதை
அறிந்தப் பின்
மனமானது
தெளிந்த நீரோடையாகும்!
வெற்றியென்பது
ஒன்றுமில்லை
என்றானப் பின்னே
வாழ்க்கை
உருசிக்கத் துவங்கும்!!

-


Fetching பூந்தையல் Quotes