புதியவன்   (புதியவன்✍️)
2.1k Followers · 1.3k Following

read more
Joined 27 June 2020


read more
Joined 27 June 2020

திங்கட்கிழமை என்பது
திருவிழா முடிந்தாற்போல

செவ்வாய்க்கிழமை என்பது
சேதியை சேகரிப்பது.!

புதன்கிழமை என்பது
சேகரித்த சேதியை சரிபார்ப்பது.!

வியாழக்கிழமை என்பது
சரிபார்த்ததை சவாலாக எடுப்பது.!

வெள்ளிக்கிழமை என்பது
எடுத்த சவாலை சமாளிப்பது.!!

சனிக்கிழமை என்பது
சமாளித்ததை மகிழ்ச்சியாக
பகிர்வது.!!

ஞாயிற்றுக்கிழமை என்பது
பகிர்வதை திருவிழா போல
கொண்டாடுவது.!!

-



எல்லைகளின் தொடக்கத்தில்
தொல்லைகளை அழித்திடனும்.!

கவலைகள் எனும் எதிர்மறை
வீரனை பொசுக்கிட வேண்டும்.!

காதல் எனும் உணர்வு
மேம்பட்டு எழுந்து மகிழ்ச்சிகளை
அள்ளிக் கொடுக்க இதயம்
அனுமதித்திட வேண்டும்.!!

பொறாமைத்தீயை
பேராசை எரிமலையை
பேரன்பைக் கொண்டு
அணைத்து விட வேண்டும்.!!

சப்தம் எனும் இரைச்சலை
இசை என்னும்
இன்ப இராகங்களைக்கொண்டு
இசைத்து பாடி
நெகிழ்ந்திட வேண்டும்.!

-



எல்லைகளின் தொடக்கத்தில்
பூக்கள் மலர்ந்து வரவேற்பது போல,

தெளிவின் தொடக்கத்தில்
மௌனம் புன்னகை பூத்து
வரவேற்கிறது.!!!

-



ஏதேதோ பேசி
ஏக்கமாக்கி விட்டாய்.!!

ஏனிந்த பிரிவு
ஏற்றம் காணாத சரிவு.!

ஏளனமாய் நகைக்கிறது உறவு
எல்லாம் துரோகத்தினால்
வந்த வரவு.!!

கற்பனையில் காதல் குளிர்வித்தது
நிஜத்தில் காதல் எரிக்கிறது.!!

மென்மையான இதயமும் வன்மமாகுது
தொன்மையான காதலும் ஏமாந்து போகுது.!!

கவியில் வார்த்த உணர்வு வாழ்கிறது
கவலையில் என் மனம் வெந்து சாகிறது.!!

கண்ணீர்விட்டு கடக்க முயல்கிறேன்
ஏதேதோ பேசி நிறுத்த முயல்கிறாயே.??

நியாயமா அன்பே .!!!

-



ஏதேதோ பேசி
ஏச்சுக்களை வாங்கும்
தெளிவற்றவர்களிடம்
தெரிந்தோ,தெரியாமலோ
நட்பாகினால்
வாழ்க்கை பயனற்று போயிடும் .!!

-


YESTERDAY AT 8:08

....

-


YESTERDAY AT 1:45

புதியவன்

-



மறக்காமல் இருக்க
வெறுக்காமல்
பழக வேண்டும்.!!

நினைக்காமல் இருக்க
கடந்திடும் உறவாக
மாறக்கூடாது.!!

சிரிக்காமல் இருக்க
சிதைத்திடும்
வலியாகக்கூடாது.!

மனநோகாமல் இருக்க
மதித்து வாழ்தல்
வேண்டும்.!!

கவலையை கலைந்திருக்க
கலையான மனமிருக்க
வேண்டும்.!!

உள்ளம் மலர்ந்திருக்க
உண்மை நட்பு
வாய்திருக்க வேண்டும்.!!

உறவுகள் பலமாயிருக்க
இதயம் ஈரமாயிருக்க
வேண்டும்.!!

இல்லறம் நல்லறமாயிருக்க
தலைவர், தலைவி
நண்பர்களாகிட வேண்டும்.!!

-



மறக்காமல் இருக்க
மாசில்லா மெய்யுணர்வு
மிகுதியாகும் போது
மீண்டும் மீண்டும்
முயற்சி செய்யாவிடினும்
மூலகுணம் நினைவு கூறிடும்.!
மென்னுணர்வு இதயத்தில்
மேகமாய் படர்வது
மையலடைவது அமைதியால் மட்டும்.!
மொழியாலும் விளக்க முடியாது
மோகத்தின் உச்சியில் நிகழும்
மெளனத்தை வார்த்தையாலும்
கூற முடியாது.!!

உள்ளம் மட்டும் என்றும்
மறக்காமல் இருக்காது.!!!

-



மறக்காமல் இருக்க
மனதில் பாரமில்லாமல்
இருக்க வேண்டும்.!!

-


Fetching புதியவன் Quotes