இன்னும் கொஞ்சம்
மலரட்டும்
அருகே வந்து
சிரித்து விட்டு போ
பெண்ணே
உன் சிரிப்போசையில்
மலரட்டும்...!!-
வாசம் கொண்ட
மலர்கள்
பூந்தோட்டத்திற்கு
அழகு...
பாசம்
கொண்ட உறவுகள்
வாழ்க்கை
தோட்டத்திற்கு
அழகு...!!-
இரவுகள்
யாவையும்
சொர்க்கமே
கனவில் நீ வருவதால்
பகலிலும் கூட
அது நீளுமே
காட்சிகள் நீ
தருவதால்...!!-
தூங்கா
இரவுகளில்
நீங்காது
உன் நினைவுகள்!
ஒரு கனவு இருக்கு
உறங்கிடும்
இரவுகளிலும்
உடன் வரும்
உன் நினைவுகள்
என் கனவுகள்...!!-
உன் இதழ்களில்
புன்னகை அரும்பிட
என் சிறகுகள்
விரிந்தது!
மெளனமாய்
என்னை நீ கடந்திட
என் கனவுகள்
உதிர்ந்தது...!!-
சில நாட்களாக
கவிதைகள்
அதிகம்
எழுதுவது
இல்லை
காரணம்
சில
நாட்களாகவே
காதலும்
அதிகமாய்
எதன் மீதும்
இல்லை...!!-
உன் உதடு ஒரு
ரோஜா
அதனால் நான்
தேனீ ஆனேன்
முத்தம் குடித்தேன்
தேனின் போதை
ஆனேன்...!!-
மழையும் நீயே
குடையும் நீயே
தீயும் நீயே
தீர்வும் நீயே
தென்றலும் நீயே
புயலும் நீயே
என் மனதின்
ஆறுதலும் நீயே
என் மனதின்
வலியும் நீயே
என் வாழ்வின்
ஒளியும் நீயே
இத்தனை எதற்கு
என் உலகமே நீ தான்...!!-