நான் ஆசைபடும்
பொழுதெல்லாம் இறுக
பற்றிக் கொள்ள
உன் கையின் நீளம்
பெருகியிருக்கலாம் என்பது
பேராசையாக
தோன்றுவதே இல்லை என்பதே
என் காதலின் பெரும் சிறுபிள்ளை தனம்....!!
-
பாதி உறக்கத்தில்
எழும் வரை உணர இயலா
பெரும் கனவு நீ...
வேண்டி விரதமிருக்கும்
பட்டினியிலும்
வயிறு கொள்ள இயலா
பெரும் பசி நீ....
பயந்தாலும் விளையாட
நினைக்கும் திருவிழா
ராட்டினம் மீதான
பெரும் ஆசையும் நீ....!!-
மேடைகள் இல்லை
ஒலிபெருக்கிகள் இல்லை
ஊர்வலங்கள் இல்லை...
வித்தைகள் மட்டும்
சமூக வலைதளங்களில்...!!-
நெடுநாள் கழித்து
ஓர் ரயில் பயணம்...
நினைவில் ஆழ ஆழ
தொடர்ந்து கொண்டிருக்கும்
ரயில் பெட்டியில் ...
இருக்கை மட்டும் மாறவில்லை...!!
பயணமும் தான்...
-
வேண்டாம்,இல்லை
எனும் வார்த்தைகளை
சுயஅகராதியில் சேர்த்தபின்
உண்மையிலே
பெருமூச்சுகள் சிறிது
குறைந்து தான் உள்ளது...-
பெரிதாக எந்த
ஆசையுமில்லை....
நீ இந்நேரம் இருந்திருக்கலாமென
எண்ணாமல் கடந்த விட வேண்டும்
மீதமிருக்கும் காலங்களை...!!-
கடித்துக் கொண்டிருக்கும் நகம்
தாண்டி சதையில் உண்டாக்கும்
வலியின் அதே சாயல் தான்,
நினைப்பதை எழுத முடியாமல்
விலகி நிற்கும் விரல்களுக்கும்...!!!-
சுள்ளென்று குத்தி செல்லும்
சூரியனின் கதிர்களை
முகம் சுளிக்காமல் ஏற்றுக் கொள்ளும்
அதே மனம் தான்
சிறு பள்ள நெளிவில் தடுமாறி
தளர்ந்து போகிறது...
-
பெரும் கூட்ட நெரிசலில்
தவறிடாத பாதைக்கு
பெரும் ஊன்றுக் கோல்
அவன் சுண்டு விரல்....-
சுருங்கிய கண்களில்
விரிந்தது பிம்பம்
கைப்பேசி திரையில் அவள்...
-