விண்ணோடு விவாதம்...
நட்சத்திரங்களுடன் கண்ணாமூச்சி...
தூரத்து நிலவோடு பல தூது...
வீசும் தென்றலோடு நலம் விசாரிப்பு...
காதோரம் கொசுவின் காதல் முத்தங்கள்...
இல்லாத பேயின் இருக்கும் உருவங்கள்...
நடமாடும் நடுநிசி கதைகள்...
சுற்றி அணைக்கும் போர்வை ...
சுற்றாமல் மடிக்கொடுக்கும் தலையணை...
இரவில் கைக்கோர்க்கும் குவளை தண்ணீர்...
அலாதி நிம்மதி பெருமூச்சின்
தாகத்திற்கு காரணமாய் அவன் அருகாமை....
அதை தணிக்க காத்திருக்கும் அவனின் நினைவுகள்....!!!
" மொட்டை மாடியில் ஓர் இரவு"
-