இரவொன்று வந்தது;
அது நகரவில்லை
உன்னை காண என் கண்கள் ஏங்கினவோ??
சற்றே யாரும் அறியாமல் - உன் புகைப்படத்தை அரவணைத்து,
உன்னை உண்மை என நம்பி ஏமாந்து,
உறங்கி !!
இரவொ நகர்ந்தது!!
-
First cry 06_11_2001
CA student 😎
உன் பார்வையில் என்னை காணும் பொழுது
என் துன்பங்கள் காணாமல் போனதன் காரணம் யாது?
இறைவனிடம் வேண்டிய நாட்கள் கிடைக்கும் எனில்
நான் வேண்டாம் என மொழிவேனோ?
பழுது அடைந்த என்னை
புதுபிக்க வந்த என் பொக்கிஷம் நீயோ?-
என் இனிய புத்தகமே !
நீ இன்றி கண்விழிபதுமில்லை ,
நீ இன்றி நான் கண்மூடுவதும் இல்லை ,
உன் அழகை காணவும்
உன்னை படிக்கவும்,
கோடி கண்களும் போதவில்லை.
நீ இன்றி வாழும் நாட்கள்...
நீர் இன்றி வாடும் செடிப் போல
உன்னை வர்ணிக்க வார்த்தை தேடி,
உன்னிடமே மீண்டும் வந்தேன்
என் இனிய புத்தகமே!
-
தலையணை என்பதால் என்னை அணைக்கிறாய் ?
இல்லை தலைவிதியே என்று அணைக்கிறாய் ?
என்னவோ, நினைத்துக்கொள்
என்னை விட்டு விடாமல் என்றும் அணைத்துக்கொள்!!-
பாசம் வைக்க யாரும் இல்லை என்று,
பாதி காலம் தவித்தாய்!
பாசம் வைத்து அழுதே,
மீதி காலமும் ஒழித்தாய்!
வேஷம் போடும் உலகினில்,
பாசம் வைப்பதை தவிர்த்தாள்
தனிமையே இனிமையாகும் !!!-
என்னை போல ஒருவனை வெளியில் தேடிய தாலோ என்னவோ,
என் தனிமை எவ்வளவு அழகானது
என்று உணராமல் போனேனோ!!-
அண்ணாந்து பார்த்தேன்,
பார்த்த என் கண்களும் பூத்து விட்டது,
என் கண்ணம் சிவந்து விட்டது,
நீ வருவாய் என்று.....
நீயோ , கண்ணாமூச்சி ஆடுகிறாய்,
மரங்கள் நடுவே உன் சாயல் பார்த்தேன்
பார்த்தவுடன் மேகங்களுக்குள் மறைந்துகொண்டாய்,
போதும் உன் விளையாட்டு!!
விளையாட்டு வினையாகிவிடுவதற்குள் வந்துவிடு
என் வெண்ணிலவே,
உன் வருகைக்காக காத்திருக்கும் பெண் நிலா நான் .-
TRUST
It is the only ray of hope,
Which holds any kind of relationship:)-
There are lots of people to spread negativity , Then why you ?
Be the one who spreads positivity!-
என் இனிய காதலா!
உன் கண்கள் என்னை ரசிக்கும் வேலையில் தான்,
நான் என்னையே காதல் செய்தேன்!!-