PRAVEEN   (Praveen.Dominic)
1.1k Followers · 509 Following

◆coimbatorian
◆5 oct 1991
◆ your quote: 1jul2018😇
Joined 1 July 2018


◆coimbatorian
◆5 oct 1991
◆ your quote: 1jul2018😇
Joined 1 July 2018
30 JUN AT 21:35

குறைந்து கொண்டே
வந்து, காணாமல் போக.,
நடந்து களைத்தவன்
சோர்ந்து அமர்கிறேன்.,
தூரத்தில் மீண்டும்
மெல்லிய வலை கீற்றாய்
அவள் தெரிய.,
நான் நடக்க துவங்குகிறேன்.,
நெருங்க நெருங்க
முழு நிலவானவள்,
மீண்டும் தூரமாகி
குறைய தொடங்குவாள்.,

அவள்,
என் தேடலை நேசிக்கிறாள்,
நான்,
அவளை நேசிக்கிறேன்..!!

-


26 JUN AT 15:21

நாம் முதன் முதலாய்
சந்தித்து கொண்டது,
முதன் முதலாய்
பேசிக்கொண்டது,
ஒன்றாக பிரயாணப்பட்டது,
முதன் முதலாய் உன்
காதலை சொன்னது
எல்லாமே.,

நான் பிறந்த நாள்
ஒன்றில் தான்.,

என்னுடைய இப்போதைய
சிந்தனையெல்லாம்.,
நீ சுத்த சைவமென தெரியாமல்,
நான் கொடுத்த பிளாக் பாரஸ்ட்
கேக்குகளை நீ என்ன தான்
செய்திருப்பாய்..!!

-


19 JUN AT 17:58

ஒவ்வொரு முறை
தேயும் போதும்,
எவனோ ஒருவன்.,

தேற்றி தேற்றி வளர
வைக்கின்றான்,
பிறை நிலவை..!!

-


18 JUN AT 18:38

தொலை தூர நடையொன்றில்
நான் கண்டுகொண்டது
பெரு மரத்தின் நிழலொன்றை.,

அதில் எனை ஆசுவாசப்படுத்த
காற்றும், சாய்ந்து கொள்ள
சிறு திண்ணையும் இருந்தது.,

நான் பெரு நடை பழகி
கொண்டதும் அதனால் தான்.,

இன்று மரமும், அச்சிறு
திண்ணையும் அங்கில்லை,
நினைவுகளின் சாட்சியாய்,
அங்குமிங்குமாய்
வீசிக்கொண்டிருக்கிறது
காற்று..!!

-


16 JUN AT 16:23

கடலுக்கு போவதாய்
நீ சொன்னாலே,
எனக்குள் ஓர்
உள்ளார்ந்த பயம்
வந்துவிடும்.,

நீரில் நீயாட,
உன் மீன்விழிகள்
இரண்டும்
குதித்தோடிவிட்டால்.,

நான்.! என்
செய்வேன்
கண்ணம்மா..!!

-


7 JUN AT 20:34

"டீ குடிக்க போலாமா"
நீ கேட்ட மறுநொடியே.,

மெல்லிய சிறகொன்று
முளைத்து.,
ஈர்ப்பு விசை இழந்து.,
பூமியிலிருந்து
கொஞ்சம் மேலே
மிதப்பேனே.,

கவனித்து
இருக்கின்றாயா
காதலே..!!

-


3 JUN AT 13:01

மழை பொழிவதை
எப்போது
வேண்டுமானாலும்
நினைத்து
கொள்ளலாம்.,

நினைத்த
உடனெல்லாம்
மழை
பொழிவதில்லை.,

எனக்கு அப்படித்தான்
உன் முத்தங்களும்..!!

-


28 MAY AT 15:18

கண்ணீர் ததும்பி நிற்கும்
அக்கண்களை ஒரு நொடிக்கு
மேல் எப்படி பார்க்க முடியும்.,

தூரத்தில் வரும்போதே
எனை கண்டு கலங்கும்
கண்களுக்கு, என்ன
ஆறுதல் என்னிடம்
இருக்க போகிறது.,

வா, முதலில் ஒரு கோப்பை
தேநீர் அருந்துவோம்.,

அதைத்தவிர முதலாவதாக
கொடுக்க, என்னிடம்
என்ன ஆறுதல்
இருந்துவிட போகின்றது..!!

-


26 MAY AT 21:35

"சொல்லுங்க மயிலு"
நீ எனை அழைக்கும்
போதெல்லாம், நான்
சொல்லும் முதல்
வார்த்தை இது.,

அன்று நீ கொடுத்த
புத்தகத்தில், ஒரு
மயிலிறகு இருந்தது.,

தமிழ் மொழியின்,
"பெயர்க்காரணம்"
அறிந்துகொள்ள,
அன்று எனக்கு ஒரு
காதலும் இருந்தது..!!

-


25 MAY AT 21:15

நாம் பேசும்போது
திரும்ப எதுவுமே
பேசாமல்.,

பேரழகாய் சிரித்து
கொண்டே கேட்கும்
பச்சிளம் குழந்தையின்.,

சிரிப்பு
உன்னுடையது..!!

-


Fetching PRAVEEN Quotes