PRAVEEN   (Praveen.Dominic)
1.0k Followers · 491 Following

◆coimbatorian
◆5 oct
◆ your quote: 1jul2018😇
Joined 1 July 2018


◆coimbatorian
◆5 oct
◆ your quote: 1jul2018😇
Joined 1 July 2018
17 APR AT 21:46

ஒரு தேநீர் நேரத்தில் திடீரென
நான் நினைவுக்கு வர.,
ஒவ்வொரு மிடருக்கும் இடையில்
மெல்லிதாய் எனை நினைத்து, பின்
கொஞ்சம் சிரித்து.,

காலி கோப்பையை மேசையின்
மீது வைக்கும் போதே என்
நினைவையும் அங்கேயே
வைத்து விட்டு.,

அவளுடைய இப்போதைய
வாழ்க்கைக்குள் நுழைந்து
விடுவதற்காகவா நான் உருகி
உருகி காதல் செய்தேன்..!!

-


14 APR AT 17:03

கன்னங்கள்.,
அது சிரிப்பில்
பிறக்கும் குமிழ்கள்.,

கண்களை குறுக்கி
ஈறு தெரிய சிரிக்கும்
உன்னையும், உன்
கன்னங்களையும்.,

நான் எப்படித்தான்
மறந்திருப்பேன்,
என் புதுபொன்னே..!!

-


13 APR AT 12:13

மீண்டும் உனை
சந்தித்தது ஒரு
மழை நாளில் தான்.,

முதன் முதலாய்
பார்க்கின்றேன்.,

மழையை விட
பேரழகாய் ஒரு
பொன் சிரிப்பை..!!

-


9 APR AT 20:03

மடியில் கிடத்தி
கொள்ள, மரியாள்
இல்லாத ஏசு கிறிஸ்து.,

எல்லா ஆலயங்களிலும்
சிலுவையிலேயே
தொங்கி கிடக்கின்றார்,
நாள் முழுதும்,
வருடம் முழுதும்..!!

-


2 APR AT 15:48

ஆரத்தழுவல்,
இறுதியாய் ஒரு
நெற்றி முத்தம்,
வழியும் கண்ணீர்.,

இவையெல்லாம் மீறி,
உடல் பிரிய காத்திருந்த
அவ்வுயிர்.,

நான் இறுக பற்றியிருந்த
அவர் கையினால்.,

கொஞ்சம் காத்திருந்து
பின் பிரிந்து சென்றது..!!

-


31 MAR AT 18:58

சாப்பிட போலாமா.?
சந்தித்த முதல் 
கணத்தில் அவள் 
கேட்கிறாள்..

ஒரு பெண்
சொல்லும் முதல்
காதலை விட.,

இது எவ்வளவு
பேரலாதியாய்
இருக்கின்றது..!!

-


30 MAR AT 11:05

பட்டுப்பூச்சியொன்று
அவன் விரல் மீது
வந்தமர்ந்து,
பின் பறந்து செல்ல.,

அச்சிறு கால்களில்
சுமந்து செல்லும்
மகரந்தம்.,

அவன்
பெருங்காதலன்றி
வேறென்ன..!!

-


28 MAR AT 21:55

அத்தனை நட்சத்திரங்கள்
வானெல்லாம் நிறைந்து
கிடந்தாலும்.,

 இரண்டே இரண்டு
நட்சத்திரங்களை தான்
ஒவ்வொரு இரவிலும்
அப்பா வறுத்து கொடுப்பார்
நான் சாப்பிட.,

அப்பா இல்லாத
இப்பொழுதெல்லாம்,
இன்னும் இன்னும்
நட்சத்திரங்கள் நிறைந்து
கிடந்தாலும்., எனக்கேனோ
பசிப்பதில்லை..!!

-


28 MAR AT 9:34

தான் பொரிந்த கதை அறியாத,
அம்மாவின் கதகதப்பு தெரியாத,
தீனிக்கு வழிகாட்டக்கூட
ஆள் இல்லாத
கலர் கோழி குஞ்சுகள்.,

கடைசியில்
இறந்தும் போகின்றன
அம்மாவை பார்க்காமலே..!!

-


26 MAR AT 14:29

ஒரு பூ.,

முதன் முதலாய்,
அரும்பாகி
மொட்டாகி
முகையாகி பின்
மலராகிறதாம் அன்பே.,

எனை பார்க்க பூக்கும்.,
உன் பொன் சிரிப்பும்
அப்படித்தானே..!!

-


Fetching PRAVEEN Quotes