வெயிலோடு பெய்து
கொண்டிருந்த
மழையிலிருந்து,
வானவில் திருடி.,
சட்டை பைக்குள்
மறைத்து.,
யாருக்கும்
தெரியாமல் எனக்கு
தின்ன கொடுத்தான்.,
தெரியுமா, அதன்
ஒவ்வொரு
வண்ணத்திலும்
ஒவ்வொரு சுவை..!!-
◆5 oct 1991
◆ your quote: 1jul2018😇
சாப்பிட்டு பின் கை துடைக்க
புடவையை நீட்டுகிறாய்.,
சலிப்பு தட்டி நான் படுத்துறங்க,
விபூதி பூசி, ஊதி விடுகிறாய்.,
வேலையில்லா
வேளையிலெல்லாம், என்
சட்டைபையில் உன்னிடம்
இருப்பதை திணித்து செல்கிறாய்.,
ஏதுமற்ற வாழ்வென்றாலும்.,
மிகையற்ற பேரன்பில்
எல்லாமுமாய் இருக்கின்றாய் நீ..!!-
பால்யத்தில், அம்மா
சோறு ஊட்டும்
காலத்திலிருந்தே
நிலவு பரிச்சயம் தான்.,
உன் வருகைக்கு
பின்பான நிலவுக்கு
தான்.,
வயதிற்கு
வந்து விட்டபின்.,
முதன் முதலாய்
பார்த்த அத்தை
மகளின் சாயல்..!!-
சகி, இப்படி அண்ணாந்து,
அண்ணாந்து பார்த்து
வானில் நீ தேடி
கொண்டிருப்பது நிலவையா..?
உனக்கு பிடிக்குமென
அந்த நிலவை நூல் கட்டி
இழுத்து.,
உன் படுக்கை அறையின்
ஜன்னல் கம்பியில் கட்டி
வைத்திருக்கிறேனே,
கவனிக்கவில்லையா நீ..!!-
அவளின்
கோபத்திற்குள்
ஒளிந்திருக்கும்
காதல் பேரழகானது.,
கடை வீதியின்
சண்டைகளுக்கு
மத்தியிலும்.,
ரோட்டை கடக்க,
கை பிடித்து
கூட்டிப் போவாள்..!!-
எனக்கு
பெண்ணின்
கண் பார்த்து
பேசத்தெரியும்.,
என்னை,
கண் கொட்டாமல்
பார்க்கும் உன்னிடம்
மட்டும் தான்.,
அது ஏனோ,
அத்தனை
கடினமானதாய்
இருக்கின்றது..!!-
கடிக்காத கருப்பு
சிற்றெரும்புகளை
தெரியுமா.?
கோவில் தூணின்
மூலையில், அவள்
வைத்து போகும்
பொங்கலுக்காய்
அவை காத்திருக்கும்.,
அந்த கருப்பு எறும்புகளை
உங்களுக்கு பிடிக்குமென்றால்.,
அவளை காண, ஏதோ
ஒரு தூணின் மூலையில்
ஒளிந்திருக்கும், என்னையும்
உங்களுக்கு நிச்சயமாய்
பிடிக்கும்..!!-
உதட்டை கடித்து
விட்டதாய் கோபம்
கொள்கிறான்.,
தேனீக்களிடம் கடி
வாங்கித்தானே
தேன் குடிக்க
முடியும்..!!-