கரும்பாறை மலையினிலே
கசிந்துருகிய பெருஞ்சுனையே,
வரண்டு போன பாலையிலே
வந்து சேர்ந்த வண்டல் மண்ணே,
பரந்து விரிந்த கடல் நடுவினிலே
அமுதாய் கிடைத்த நண்ணீரே,
சுட்டெரிக்கும் வெயிலினிலே
இதமளித்த மரநிழலே,
பல லட்சம் விண்மீன்களிலே
ஒளி கொடுத்த வெண்ணிலவே,
மொழியறியா நாட்டினிலே
உரக்க ஒலித்த தாய்மொழியே,
நஞ்சு நிறைந்த உலகினிலே
அன்பை அருளிய தேவதையே,
ஊன் கொண்ட என் காதலுக்கு
உயிர் தந்த கண்மணியே,
காலமெல்லாம் உனை எந்தன்
கண்ணில் வைத்து காப்பேனடி
என் கண்ணாண கண்ணம்மா....
-