ஒவ்வொருவர் வாழ்விலும் புனைக்கப்பட்ட கவிதை வரிகள் உண்டு... அதில் மறைக்கப்பட்ட காதல் கதையும் உண்டு... கற்பவன் மனம் கதை தான் என்று சொல்லும் எழுதியவன் மனம் என் வாழ்க்கை கூற்று என்று மிளிரும் 🌕
சொற்களுக்கும் சுவை உண்டு என்று அவளைப் பற்றி எழுதிய காதல் கவிதையுடன் எந்தன் கண்ணீர் துளியும் சேர்ந்து இனிக்கும் போது தான் நானும் கற்றுக்கொண்டேன் அவள் மீது அதீத காதல் கொண்டேன் என்று....🦋❤️🔥🦋
நிராகரிக்கப்பட்டவர்களின் வலியினை ஆயுள் முழுவதும் உணர முடியாது நிராகரித்தவர்கள்.....❤️🔥
என் காதல் கதை நீர்நிலைகளின் மீது விழும் ஒரு மரத்தின் நிழல் போன்றது அவ்வப்போது உன் நினைவுகள் தந்த வலிகளால் அவ் ஓவிய நிழலானது அலைபட்டு எவ்வாறு கதி கலங்கி போகிறதோ அவ்வாறே என் மனம் கல்லறை தேடி அலைகிறது.....❤️🔥🦋❤️🔥
அணைகின்ற விளக்கிற்கு சற்று பிரகாசம் அதிகம் தான் அந்நொடிகளில் ஒளியானது விழிகளை பறித்து இருளினை பரிசாக தரும் துன்பம் என்னும் வடிவில்....
நிகழ்காலத்தில் நிகழ்வது எதுவும் நிரந்தரமும் இல்லை... நம் எதிர்காலம் இதுதான் என்று எண்ணி இறந்த காலத்தை வைத்து முடிவும் எடுக்காதீர்....
காலமானது கண் இமைக்கும் நொடிகளில் பல மாற்றங்களைத் தரும் அற்புத மாய நிலையாகும்.... பல மன வலியினை தாங்கிய இதயத்திற்கு அன்பென்னும் வடிவில் மருந்தானது விருந்தென கிடைக்கும்...
கவி மிகு தென்றல் காற்றும் புல்லாங்குழல் இன்றி என் காதல் கானம் பாடி அவள் நினைவுகளை மீண்டும் என் இதயத்தில் மலரச் செய்கிறதே....🌼🦋🌼
எழில் மிகு காட்சிகள் நீரின் மீது பரிசல் பாதை பயணங்கள் அங்கே தண்ணீர் ஆனது பாறையின் மீது அதீத காதல் கொண்டிருக்குமோ என்று தெரியவில்லை காலம் கடந்து இன்று நான் காணும் போது ஓவியமாய்🌻 காட்சியளிக்கிறதே என் விழிகளுக்கு....🦋
இளமைக்கால இன்பத் தென்றல் எவருக்காகவும் காத்திருக்காது அதனை கடந்து செல்வதற்கு முன்பு தேவையான அனுபவங்களையும் அழகிய நினைவுகளையும்🦋 சேமித்து வைத்துக் கொள்ள பழகுங்கள்...🌻❤️🔥🌻
தனிமைக்குத் துணையாக உன் இனிமையான நினைவுகள் இனி உரையாடத் தொடங்குகிறதே.... என் கனவில்🦋
தொடர்கதையான என் காதல் கதை இனி விடுகதையானதே வெண்மை நிற மேகத்தினில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் கருமை நிறக் கருவிழிகளுக்கு என் காதலின் தாகத்தை அறிந்து கொள்ள நேரம் இன்றி மறந்து போனதோ...... ❤️🔥🦋❤️🔥
வாழ்வதே வரம் தானே அதில் பிழை இல்லையென்றால் கதை எவ்வாறு உருவாகும்?
உன் நினைவுகள் வளர்பிறையானால் வாழ்வில் ஏது தேய்பிறை
மரமாக வளர வேண்டும் என்றால் சிறிது காலம் செடியினில் துளிரும் இலையினை ஆடுகள் மேய்ந்து இருப்பினும் மீண்டும் துளிர்விட்டு வானத்தை நோக்கி பயணத்தை தொடர வேண்டும்.... அதை விடுத்து இழந்ததை எண்ணி வேதனை கொண்டல் வாழ்வனைத்தும் சோதனையாகவே முடிவு பெறும்.....❤️🔥🦋❤️🔥
ஒருவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கைக்கும் அவர்கள் நம் மீது வைக்கும் உண்மையான அன்பிற்கும் பிரிவுகள் மூலமாக சில நேரங்களில் உணர முடிகிறது இரண்டில் ஏதேனும் ஒன்று தோற்றாலும் காதலின் வீழ்ச்சி நிலையாக கருதப்படுகிறது.
காத்திருந்து சேர்ந்த காதலும் இவ்வுலகில் உண்டு காத்திருக்க நேரம் இன்றி பிரிந்து போன வேடிக்கையான நிகழ்வுகளும் இவ்வுலகில் உண்டு....
சொந்தம் என்று உன்னைத் தவிர வேறொன்றும் இல்லை என கூறியவர்கள் இன்று யாரோ போல் மறைந்து செல்லும் நொடிகள் எல்லாம் மரணம் வரை மறந்திருக்க இயலாத மாற்றங்களில் சிறந்த ஏமாற்றமாக எந்தன் வாழ்விலும் அமைந்திருந்தது....
தொடர்வண்டி நிலையத்தில் தொடங்கியது என் காதல் கதை முடிவுக்கு அதன்பின் நினைவுக்கு வருகிறது எந்தன் முதல் காதல் பயணம் எங்கே தொடங்கியது என்று....
உன்னை பற்றி நினைக்கும் நொடிகள் எல்லாம் நினைவுக்கு இனிமையாகிறது உன்னைப் பற்றி மறக்க நினைக்கும் நொடிகள் எல்லாம் மனதுக்கு விருப்பமில்லை என மீண்டும் உன்னை பற்றி நினைக்க தூண்டுதே என் காதல் மங்கையே.....❤️🔥