மனிதர்கள்
காரணங்கள் தேடித் தன்னை
நியாயப்படுத்தி
தற்காத்துக்கொள்ளும் முன்,
நீங்களாகவே
மன்னித்துவிடுங்கள்..!
-
தயவுசெய்து எனை தேடாதீர்கள்,
நிம்மதியாக தொலைந்துகொண்டிருக்கிறேன்.... read more
அவர்களை
மன்னித்துவிடகூடாதென இருந்து,
முடிவில் மன்னித்துவிடும்,
என்னை
நான் என்றும்
மன்னிக்கவிரும்புவதில்லை..!
-
இப்பொழுதெல்லாம்
சற்றும் யோசிக்காமால்
முட்டாள்களை ஒதுக்கி
வைத்துவிடுகிறேன்,
மேலும் முட்டாளாக
துளியும்
விருப்பமில்லாததால்..!
-
இந்த இரவு,
எனக்கு தேவையான
அமைதியை கொடுக்க
அத்தனை மெனக்கெடுகிறது..!
-
இருள் படர
கரம் கொடுக்கிறேன்,
இரவின்
பெரும்நிசப்தத்தை ஆள..!
-
செய்யும் துரோகங்களுக்கு,
சூழ்நிலை என்று
காரணங்காட்டித்
தப்பிக்கொள்கிறது மானுடம்..!
-
கடைசியாக எங்கு வைத்தேன்
என்று தெரியவில்லை,
இந்த நிம்மதியை..!
-
ஒருவேளை
என் வேஷங்கள்
கலைந்தாலும்,
எனை நானே சிலுவையில்
அறைந்து கொண்டாவது
உங்களை நம்ப வைத்துவிடுவேன்!
-
காரிருள் கருமையில்
கலந்து தொலைவதே
பெருஞ்சுகம்,
பிரபஞ்சத்தின்
பெரும்மௌனமான
இந்த இரவே, நீ நீளாயோ?
-
விடிவதற்குள்
தூங்கிக்கொள்ள
போராடிப் போராடி
இரவை தொலைப்பதே
வாடிக்கையாகிவிட்டது..!
-