நிலத்தில் அலையாக தேடுகிறேன்...
நீரில் இலையாக மூழ்கிறேன்...
இரவில் நிழலாக நீள்கிறேன்...
பகலில் கனவாக தொடர்கிறேன்...
உறவில் ஒன்றாக வேண்டுகிறேன்...
உறக்கத்தில் உன்னோடு தான் வாழ்கிறேன்...
நிஜத்தில் வெகு நாளாக !
"உன்னை நான் நேசிக்கிறேன்"-
கவிதைகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட கயிற்றில் தொடுக்கப்படும்,
அடுக்கு மொழி இல்லாத
எதார்த்ததின் குவியல்கள்
எனது வாழ்க்கை...-
நித்தம் ஏக்கத்துடன்
ஜன்னல்கள் இடுக்கில்
காத்திருக்கும் காற்றுக்கு,
ஒரு யாசகன் முகம் வேண்டியிருக்கிறது....-
இதழோரம் தீண்டி ...
இளம் சூட்டில் அணைத்து ...
இலகுவாக ஒன்றினணந்திடும் ...
ஒரு குவளை தேநீர்...
அடிமையாக்கிடும் ஒருவித ஆன்மீகம் தான்...-
சரியாக இருந்து சலித்து விட்டது...
தவறுகள் செய்ய காதலிக்க வேண்டும்...
திருத்திக் கொள்ள காதலி வேண்டும்...
இதற்கு எல்லாம் சற்று காத்திருக்க தான் வேண்டும்...-
என் கதைக்கு முன்னுரை, முடிவுரை;
அவன் எழுதிவிட்டான்...
முயற்சியுரையை என் கையில் விட்டுவிட்டான்...
-
நான் இமைக்கும் நொடியெல்லாம்,
உன்னை நினைக்க மறந்ததில்லை...
உன்னை நினைக்கும் நொடியெல்லாம்,
நான் புன்னகைக்க மறுத்ததில்லை...
நான் புன்னகைக்கும் நொடியெல்லாம்,
என் எதிரில் நீ இருப்பதில்லை...
என் எதிரில் நீ இருக்கும் நொடியெல்லாம்,
நான் இமைக்க நினைத்ததே இல்லை!-
விஷமென தெரிந்த பின்பும்
ருசித்து பருகுகிறேன்...
விருப்பத்தால் அல்ல...
விரும்பியதால்...
-
என்றோ இறந்திருக்க வேண்டும்...
இன்றும் ஓடிக்கொண்டு இருக்கிறான்...
"ஆண்" என்ற பெயரை
காப்பாற்றி கொள்ள...-
என்னை வெறுப்பதற்கு
ஆயிரம் காரணம் இருக்கும் உன்னிடம்,
என்னை நேசிப்பதற்கு
ஒரு காரணம் கூடவா இல்லை?
காரணங்களால் பின்னப்படும் கயிற்றில் ஒரு நூலிலையில் கூடவா என்னை காதலிக்க காரணம் இல்லை?
வெறுப்பில் தோய்த்த நினைப்பில் அதில் ஒட்டாத ஓரத்தில் கூடவா நான் இல்லை?
எத்தனை வெறுப்பு!
அத்துனையும் தெரிந்த பின்பும்,
ஏன் இத்தனை வெறுப்பு?
என்னை வெறுப்பதில் உனக்கு அத்துனை மகிழ்ச்சி என்றால்...
என்னை மட்டும் எப்பொழுதும்,
வெறுத்துக் கொண்டே இரு....-