நீ...
அலைபேசி எடுத்தவுடன்.,
சொல்லு.. என்று தொடங்கும்.,
நம் பேச்சு...
யாருங்க.., நீங்க என்ற நிமிடமே
யாரோவாகிப் போனாய்
நீ!
ஒவ்வொரு நிகழ்வும்.,
உன்னிடம் சேர்க்க.,
நான் காத்திருக்க..,
என்னிடம் எல்லாம்
மறைக்க தொடங்கிய
அக்கணமே...
யாரோவாகிப் போனாய்,
நீ!
காதலை கருவாய்
நான் சுமக்க.,
துரோகத்தை பரிசாய்
நீ அளிக்க.,
யாரோவாகிப் போனாய்
நீ எனக்கு யாரோவாகிப் போனாய்!
எதேர்ச்சியாக இனி காண வேண்டாம்.,
என் உயிரான நீ
யாரோவாகிப் போன பின்பு!
-