சேராது எனத் தெரிந்தும்..,
தீராத காதல் உன்மேலெனக்கு .
என் இச்சைக்கேற்ப படைத்தயுன்னை.,
ஏனோ பிச்சைக் கேட்டும்
தரமறுத்தான்
இதுவே நம் கடைசி சந்திப்பு
என்றரிந்திருந்தால்
இன்னும்ய் இறுக்கமாய்பற்றியிருப்பேன்
யாரும் பிரிக்கமுடியா வன்னம் உன் கரங்களை!
கலங்கிய கண்களுடன் சிரித்துப்பிரிந்தத்
தருணம்...
இன்றும் ரணமாய்!
என்றும் உனக்கானவள் நானில்லையென்றரிந்தும்
என்றும்உன்னவளாய் நடத்திய நீஎன்றும்
என் இதயத்தில்!-
காதலின் முள்வேலி
உன்னை நினைத்து,
எழுத முயற்சிக்கும் போதெல்லாம்…
அடைமழைபோல்
உணர்ச்சிகள் கொட்டுகின்றன.
வார்த்தைகள் வருவதற்கு முன்
கண்ணீர் வந்து விடுகிறது…!-
பிரிந்து அவரவர் பாதையில்
நாம் பயணிக்கும் முன்....😌
இன்னும் கொஞ்ச நேரம் நீண்டிட வேண்டும்
உன்னுடன் வாழ்ந்த இத்தனை நாள் வாழ்வை
இனியொரு முறை நான் வாழ்ந்துந்திட.,
-
விதியின் சதியால்
வெவ்வேறுப் பாதையில்
பயணித்தாலும்....,,,
காதலென்றால்.,
என் அகராதியில்
என்றும் நீ மட்டுமே!
-
மறந்துவிட்டாயோ நீ?
நினைவுகளால் ஏக்கம் கொண்ட என் இரு கண்கள்,
காணும் திசையெங்கும் உன் முகத்தை
தேடாமல் தேடுகிறேன்...
வெண்மழை போல வராத உன் மெச்சம்,
என் மனதில் தூறிக் கொள்கின்றது
சிதைக்கப் பட்ட நெஞ்சோடு
உன்னுடனிருந்த நிஜங்களை
தேடாமல் தேடுகிறேன். ...
தினம் தினம் மறைக்கப்பட்ட காதலின் குரல்கள்
இனியொரு முறைக் கேட்க
உன்பெயரோலிக்கும் திக்கு திசையெல்லாம்
தேடாமல் தேடுகிறேன்....
நீ போன பாதையை நானும் நடந்தேன்,
உன் நிழல் கூட இனி வராது என தெரிந்தும்…
தவித்தே தேடுகிறேன்,
தேடாமல் தேடுகிறேன்…தொலைத்த உன்னுள் வாழும் என்னை!
-
கரங்கள் வேண்டாம்!
காலங்கள் பேசும் நம் நினைவுகள் போதும்!
கண்ணீரில் கரைந்துவிடுமென
ததும்பிய நீரையும்
உள்ளிறக்கி காத்துக்கொள்வேன்!
-
செல்லரித்துப் போனது
பேசாமல் விட்டுச் சென்ற வார்த்தைகள்!
காதல் மட்டும் இன்னும் கடந்து வர மறுக்கிறது
தூரத்திச் சென்றால் காதல் வராதென்பதறிந்து!-
அந்த இரவு…
என் மனதில் உன் நினைவுகள் மட்டும்.
வானத்தில் ஒரு அரை நிலா –
நீ இல்லாத என் வாழ்க்கையைப் போலவே
முழுமையற்றது…
நீ பேசிய வார்த்தைகள்,
இப்போ என் செவிகளில் சத்தமில்லா கண்ணீராக கொட்டுகின்றன.
மௌனம் மட்டும் என் தோழி,
மழலை இல்லாத புன்னகை என் முகத்தில்…
காற்று கூட என் மனநிலை புரிந்து,
சொல்லாமல் போன உன் பெயரை
மெல்ல உதறி கொண்டு செல்கிறது.
நீ இருந்திருக்க வேண்டிய இடத்தில்,
இப்போ வெறும் நிழல் தான் நிறைந்திருக்கிறது…
அந்த அரை நிலா,
நீ என்னை விட்டு போன நாள் முதல்
முழுமையாவது இல்லை…
-
உன் பார்வை சிந்தும் நெருப்பு
நிர்ணயிக்கிறது
என் பார்வை
தீபமாய் ஒளிர்வதா
தீயாய் சுடுவதா என-