13 DEC 2017 AT 18:04

காடுகழனி எல்லாமே
காணாமத்தான் போச்சுடா
பச்சப் பசேல்னு இருந்தநிலம்
பட்டுப்போய் நாளாச்சுடா

குத்திப்புட்டா தண்ணிவரும் முன்னெல்லாம்
இப்போ
குத்தவெச்சு காத்திருக்கோம் தண்ணிக்கு
கத்திப்புட்டு போவுறான் பாவிபய
என்னென்னமோ செய்யிறேன்னு மேடையில
எங்க புள்ள தவிக்குது கோடையில
மொத்தத்துல எங்களக்கேக்க நாதியில்ல
-ச.பவித்ரா


- ச.பவித்ரா