....
-
பா.சravana க்குமாா்
(நேசத்துடன் பா.ச க்குமார்)
938 Followers · 134 Following
சங்கம் வைத்து தமிழ் வளா்த்த மதுரையில் தமிழில் உளறிடவே படைக்கப்பட்டவன்.மதுரை உயா்நீதிமன்றக்... read more
Joined 13 November 2018
27 JUL AT 8:04
குறைகளைத் தேடி
ஈரைப் பேனாக்கி
பேனைப்
பெருமாளாக்குகிறாய்
என்னைத்
தவிர்ப்பதற்கென,
என் அன்பே
ஏன் அவ்வளவு
மெனக்கெடுகிறாய்?,
உனக்கான
எனதன்பு நீ
ஆணையிட
கழுவேறிடும்
எவ்வாராய்ச்சியுஞ்
செய்யாமலே!....-
27 JUL AT 7:56
பரிணாமம் பெற்று
வைரமாகலாம்,
நான் மரித்தபிறகு
என்
இதயத்தைக்
கூறாய்வு செய்து
பார்த்திடவே!....-
27 JUL AT 7:52
கண்மூடி ரசித்திட
ஆயிரமாயிரம்
உண்டாகினும்,
அத்தி பூத்தாற்போல்
என்னுள் கசிந்த
அன்பின்பாற் கருவான
இக்காதல்
மீதமான அத்தனைக்கும்
முதற்றே உலகு!.....-
26 JUL AT 16:53
எழுதும்
போதெல்லாம்
வார்த்தைகள்
இருக்கிறது
உணர்ச்சிகள்
அற்றபடி,
வண்ணங்களில்லாத
வானவில் போல!....-