முந்தி நின்று சாலை கடக்கும் வேளையில்
முகம் தெரியா மூன்றாம் நபர், "பத்திரம்!! வண்டி வருகிறது!"
என்ற பார்வையில் என்னை தடுக்கும் அந்த ஒரு நொடியாகவே வேண்டும் இந்த உலகம்.-
இன்றைய சின்ன சின்ன ஆசைகளை இழக்கும் போதும் மகிழ்வாகவே உள்ளேன் ..
அவையாவும் நாளைய வெற்றியின் படிகட்டாக மாறும் என்பதால் ..-
அதீத காதல்
என்னையே சுற்றிசுற்றி வருகிறாய்
காதோரம் வந்து கானா பாடல் பாடுகிறாய்
எத்தனை முறைதான் விரட்டுவது
மீண்டும் மீண்டும் என்
மேனியையே தேடுகிறாய்
என் மீது தான் அவ்வளவு காதலா ?
இல்லை உன் பசிதீர என்னைத்
தேடும் உன் சுயநல செயலா ?
இரவில் உறக்கம் தொலைந்து போனது
உன் மேல் வெறுப்பும் உயர்ந்து போனது ...
கொசு தொல்லை தாங்க முடியல 😁-
தன் உயர்வுக்கு மட்டுமே போராடுபவனை சாமானியன் பேசுவான்
நாட்டின் உயர்வுக்கு போராடுபவரை சரித்திரமே பேசும்-
மனதை ஈர்த்த மாய
இசையில் விழுந்தேனோ ?...
உணர்வை தூண்டும்
உன்னத வரிகளில் விழுந்தேனோ ?...
வரிகள் தரும் பொருளில்
தான் விழுந்தேனோ ?...
இதை எண்ணி பார்க்கையிலே
மீண்டும் விழுகிறேன் ..
ஆசை பாடல்கள் அரங்கேறும் போதெல்லாம் ..-
வெற்றி பெற தகுதி
இருக்கிறதோ இல்லையோ
ஆனால்..
கடுமையான உழைப்பு
கட்டாயம் கண் திறக்க
செய்யும்
அந்த கடவுளை
-
மனிதனின் எதிகாலத்தை மாயபெட்டி உண்பதா !!!
இதழ்களின் வாசிப்பு குறைந்து போனது - இமை
காட்சிகளை தேடியே அலைந்து திரிந்தது
மனமோ சிந்தனை இன்றி சிதறி போனது - உடன்
எதிர் கால வாழ்வும் சேர்ந்தே வீழ்ந்தது
மெகா தொடரின் மருமகள் சூழ்ச்சியாம் - அதை
கற்றே பல குடும்பங்கள் வீழ்ச்சியாம்
மனிதனின் வாழ்வை மாய்க்கும் மாயபெட்டி - என்றும்
எதிர்ப்போம் அதனை நம் கவிகொட்டி-
ஒரே முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தான் உன் வெற்றியை தடுக்கிறது
-
இங்கு சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையே இல்லாதவர்கள் அல்ல ..
கவலையை மறைக்க தெரிந்தவர்கள் ..-