அவள் குரல் ஒலித்திடவே,
இவன் மனம் குதித்திடவே,
இடையினில் தவித்திடவே,
தனிமையும் தளர்ந்திடுதே,
நினைவினில் இணைந்திடுதே,
இனியவர் கனவிலுமே,
இடம்பெறுகிறது எதிர்பாராத;
இடைவிடாத ஓர் இன்பமழை
இங்கும் அங்குமென
இடைவேளையின்றி பொழிந்திடவே,
ஆலாங்கட்டி மழையாக
அன்பும் பண்பும்
படியமைக்குதே இங்கு,
பல ஆயிரம் காலத்து பயிர்களுக்கு...!!!-
Imagine is My power 😎
Lover of lovable poems 💝
Memories Collector 😉 read more
விதிக்கு மதி
என்றும் எதிர்கட்சியே,
தோழர் தோல்வியினை
சந்திக்கும் வேளையில்
குற்றம் சாட்டப்படுகிறது,
"இது எதிர்க்கட்சியின் சதி...!"-
பார்வையை ஈர்த்த,
விழிகள் அன்று !
பாடல் ஈர்த்த,
வரிகள் இன்று !!
இரண்டில் இருந்தும்
மீள இயலாமல்,
இதயம் எதார்த்த
வாழ்வினில் வாழ்கிறது
ஓர் ஊமை காகிதமாக...!!!-
பெருங்கடலின் நடுவே,
காகிதத்தில் கப்பல் ஒன்று!
துடுப்புகளின்றி
தவழ்ந்து செல்கிறது,
எல்லையின் தடுப்புகளை தகர்த்து; தப்பித்துச் சென்றதாக
கூறப்படும், மீனவனுடைய
விசைப்படகின்,
பிரசவத்திலிருந்து...!-
சற்றே நெஞ்சு வலி !
கால் சட்டைக்கு சென்றது
மாத இறுதியில்,
சட்டென்று கை !!!-
திருட சென்றவனுக்கு
நகை தந்தது வீட்டின்
முன்கதவு விளம்பர
பலகை ஒன்று,
"வீடு வாடகைக்கு
விடப்படும்!"-
பக்கம் வரும் முன்னே,
சற்று வெக்கப்படும் பெண்ணே !
கால தாமதமின்றி
உந்தன் காதலைச் சொல்,
காதருகினில் கடிகாரம்
குலைக்கும் முன்பாக..,-
ஒரு நிலவு..,
இரு நினைவு..,
முதல் ஒன்று தொலைதூரம்...
மற்றொன்று,
தொலைந்(த்)த துயரம்...-
ஒரு நிலவு..,
இரு நினைவு..,
முதல் ஒன்று தொலைதூரம்...
மற்றொன்று,
தொலைந்(த்)த துயரம்...-
இருள் சூழ்ந்த உலகினில்
வழி மாறிய மின்மினி
பூச்சிக்கு ஒளி தந்தது
அதன் பின்னனியே !
ஒளி தரும் வலியை மறந்து
முன் தோன்றிய வழியினை
தொடர்ந்து இருளை தகர்த்து
முன்னேறி செல்கிறது
ஓர் தேன் கூட்டின் உள்ளே...!!!-