மறையும் வானவில்லாய் சந்தோஷம்...
ஏன்?
நீடிக்கும் வானமாய் சோகம்...
ஏன்?
விடை கிடைத்தது...
யோசிக்கும் மனநிலையை பொருத்தது என்று...-
Life is all about how you face struggles and come back as an energetic soul
-
மழைத்துளி மறைந்திருக்கும்...
எதிர்நோக்கினால் ஏங்க வைக்கும்...
எதிர்பாராத நேரத்தில் எதிர்வினையாற்றும்...
மனிதர்களைப்போல!!-
எல்லாம் தோல்வியல்ல...
மாறிய திசையில் சரியாக செல்வதே வெற்றி!!
விமானியாக நினைத்த ஐயா அப்துல் கலாமும் விஞ்ஞானி ஆனது
வாழ்க்கை திருப்பிய திசையில்
பயணித்ததால்தான்!!
மறுத்ததால் அல்ல!!!-
இதய வானில் நட்சத்திரம் ஜொலிக்க
மூளை வார்த்தைகளை இடியாய் படபடக்க
உதட்டிலிருந்து மின்னலாய் வெட்டும் சொற்களை
பேனா மை வார்த்தைகளாய் சாரலிட
மழைத்துளியை தன்வசமாக்கிக் கொள்ளும் மண்ணாய்
காகிதம்.....
-
மற்றவரின் வாய்ப்பை
தட்டிப்பறிக்கும் முன்
நினைவில் கொள்
நீ சுவாசிப்பதே
கடவுள் கொடுத்திருக்கும்
வாய்ப்பில் தான்...
-
வேண்டுமென்றா செய்தேன்
வேண்டும் என்று தானே செய்தேன்
வேடிக்கையாய் செய்தது
வேதனையாய் முடிந்தது
மாங்காய் பறித்து மாட்டிக்கொண்ட
மழலைப்பருவம்....-