இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்
என் இனிய கவிதையே...!-
நான் திரும்ப திரும்ப
படித்திட நினைக்கும் பக்கங்கள் நீ...♥
அத்தனை ஏமாற்றங்களையும்
ஏற்றுக்கொண்டபின்
ஏதும் நினைக்காதே
எனும் மனதிற்கு
எதையாவது நினைத்தபடி
கடக்கத்தான் தோன்றுகிறது...!-
நீ நிறைந்திருப்பதால்
இந்த தூரங்கள்
என்னை பெரிதாய்
ஒன்றும் செய்துவிடுவதில்லை...
என்னை வழிநடத்திட
எப்போதும் உன் நினைவுகள்
என் வசம் உள்ளதடி...!-
என் வீட்டிற்குள்
அடியெடுத்து வைக்கும்
அந்த பக்கத்து வீட்டு
கோழிக்கு எங்ஙனம்
புரியவைப்பது
இது புரட்டாசி மாசம்
இல்லையென்று...!-
இந்தக் காதலுக்கு
நூலறுந்த பட்டத்தினை
வழிநடத்தும்
காற்றைப் போல
இந்த வாழ்க்கையை
வழிநடத்திப் போகிறது...!-
நினைவாய்
ஒரு துளிர்விடுவதை
போலத்தான்
இந்தக் காதல்
என் வழியெங்கிலும்
கவிதைகளை
துளிர்விட
செய்து போகிறது...!-
முதல் பக்கத்தின்
புன்னகை
கடைசிப்பக்கத்தில்
கண்ணீராய்
முற்றுப்பெற்றிருக்கலாம்...
இல்லையேல்
முதல் பக்கத்தின்
கண்ணீர்
கடைசி பக்கத்தில்
புன்னகையாய்
முற்றுப்பெற்றிருக்கலாம்...
காலமோ
கடைசிப்பக்கத்தினை
வெற்றுப்பக்கமாய்
விட்டுப் போவதெல்லாம்
வேறு விதமான வலியே...!-
வான் தெளிக்கும் மழையாய்
வசந்தம் வீசும் காற்றாய்
நறுமணங்களை
அள்ளியெடுத்து வரும்
பூக்களாய்
இன்று போல்
என்றும் இனிமையாய்
வாழ வாழ்த்துகிறேன்
என் அன்பு தங்கமே...
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
எங்கள் வீட்டு தேவதையே...!-