கொண்டாட்டங்கள் என்பதெல்லாம்
கொண்டாடும் வரை மட்டுமே.
சில பல காலம் தான்
சில மணி நேரம்தான்
மனிதனுக்கும் பொருந்தும்.
வாழ்க்கை அது அப்படித்தான்.
#முகமன்-
முற்றிலும் உடைந்திருக்கும்
போது உங்களால் சிரிக்க முடிந்தால்
அடுத்த முறை உங்களை
உடைக்க எதுவும் இல்லை
-
மனம் விட்டு அழ
உங்கள் மனமே
எப்போதும் காத்திருக்கும் போது
விரும்பாதவர்கள் மனங்களை ஏங்கி
ஏன் வெந்து சாகிறீர்கள்???
-
நம் வலிகளைத் தேற்றுவது
நம் கண்ணீர் அல்ல.
அந்த நேரத்துப் போலியான புன்னகை.
~-
அவரவர்கள்
அப்படியே தான் இருக்கிறார்கள்.
நீங்கள் தான்
மாறி மாறி
உங்களைக் குழப்பிக்கொள்கிறீர்கள்...
-
மிகச்சரியாக நடப்பவர்களுக்கு தான்
'திமிர் பிடித்தவர்கள்' என்ற பெயர் பொருந்தும்...
-
என் இரைச்சல்களை மட்டும் பார்த்தவர்களுக்கு
என் அமைதி
சற்று வித்தியாசமாக தான் தெரியும்.-
தேடுபவர்களிடம் மட்டும்
தஞ்சமாகுங்கள்.
தேடாதவர்களிடம்
நினைவில் கூடச் செல்லாதீர்கள்.
-
முத்தங்களை விற்று
வெட்கங்களைப்
பெற்றுக்கொள்ளுங்கள்
மகள்களிடம்...-
அணுவணுவாய்
சாவதற்கு முடிவெடுத்தப்பிறகு
காதல் சரியான வழிதான்
- அறிவுமதி-