இரவின் விழிகளில்
உன் நினைவுகளை
விதைத்து இருக்கிறேன்
அது காட்சி படமாய்
இதயத்தை ஊடுருவி
இரவை அழகாக்கிறது-
ஆனால் , கவிதை பிறப்போ
அப்பா தந்தது.
*கருவாச்சி (ML)* காதலின் அடையாள... read more
நாங்கள் இருவரும் சமமாக
பெற்றும் தந்தும் கொண்ட
பல ஏமாற்றத்தின் வீரியங்கள்
உருகி போவது
அறியாமலே நடந்து விடுகிறது-
எல்லாம் சரியாகிவிடும்
என்ற நம்பிக்கையை மட்டும்
சரியாக வைத்துக்
கொள்வதை காட்டிலும்
அதற்கான சரியான
பயிற்சியையும், முயற்சியையும்
என்றும் சரியா விடாதே
எனதருமை மனமே!-
அர்த்தமற்ற காத்திருப்பில்
அலாதியான சுகம்
ஆழமாய் பொதிந்திருக்கும்
அவனுக்கானதாய்
மட்டும் அது இருந்தால்-
மாறாத நிகழ்வாக
நிலா வருவது இருந்தாலும்
நீளும் இரவில்
நீங்க பல மாற்றத்தை
நித்தம் நிகழ்த்தி விடுகிறது
பலர் மனத்தின் ஆழத்தில்-
தனிமை ஒன்றை
ஏற்கச் சொல்லி
தள்ளிவிடும்
வாழ்க்கையை
புறக்கணிக்காமல்
ஏற்றுக் கொள்ளுங்கள்
புரியாத பல விஷயங்கள்
புலப்படும்
புதிய விடியலும் நமதாகும்.-
ஓடும் நீருக்கு ஏற்றதாய்
தலை சாய்க்கும்
நாணலை போல்
தன்னவளின்
சிறு தலைதிருப்பலில்
அவனின் சகலமும்
சாபமும் பெற்று விடும்
மோட்சமும் பெற்று விடும்-
தொடரும் பயணங்கள்
தொலைக்க முடியாத
நினைவுகளையும்
தானாக தொலைந்து விடும்
நிஜங்களையும்
சுமந்து கொண்டு நீள்கிறது-
தனிமை ரசிக்க முடியாமல்
தனிமையில் வாழ முடியாமல்
தகிக்கும் வெறுமையை
தாங்கிக் கொண்டு
கடப்பது தான்
கடினத்துக்குள் கூட
கட்டுப்படாத கடினம்.
வெறுமையை விலக்க
முற்பட்டால்
தனிமையின் அழகை
உள்வாங்கி
உணர்ந்து வாழ முடியும்.-
காற்றோடு பேச ஆரம்பித்தவுடன்
கவலைகளை மட்டுமல்ல
கார்கூந்தலையும் கலைத்து விளையாடுகிறது-