தெரிந்தே தவறவிடப்படும்
சில அழைப்புகள்
தவறிய அழைப்புகளில் சேராது-
பிடிப்பு: நா. முத்துக்குமார், கவிதை எழுத, புத்தகம்... read more
யாவரும் உறங்கிய வேளையில்
சலனமில்லாமல் பெய்கிறது மழை...
தாழிட்ட அறையில்
ரகசியமாய் அழும் பெண்ணைப் போல-
கறைகள் இருந்தாலும்
தேய்ந்து போனாலும்
முழுநிலவை ரசிக்காமல் யாரும் இல்லை..
குறைகளை களைந்து
ரசிக்க பழகுங்கள்..
மனிதர்கள் அவ்வளவு அழகு-
பண்டிகையின் வாசம் அகலாத
மறுநாள் காலைப்பொழுதில்
வேலைக்காக ஓடுவதில் புரியத் துவங்குகிறது
வாழ்வின் எதார்த்தம்-
சிறகடிக்கும் பட்டாம்பூச்சி போல
சில உறவுகள்
நிரந்தரமாய் தங்கிவிடுவதில்லை.
வண்ணமயமான நினைவுகளை
தந்து செல்கின்றனர்..-
எத்தனைமுறை படித்தாலும்
விளங்கவில்லை,
இந்த மனிதர்களை படிக்கையில்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்-
கேட்டு சலிப்படைந்து
யாரும் கவனியாத வேளையில்
சோர்ந்து கண்ணயரும் யாசகனின்
பிச்சைப் பாத்திரத்தில்
தன் பங்கிற்கு
வாரி இறைத்தது
மழை-
கிடைத்தாய் நீ..
என்னால் நம்ப முடியாத
அதிசயங்கள் அத்தனையும்
உன் கண்ணசைவில்
நிகழ்த்திகாட்டினாய்..
என் வாழ்விற்கு
புது அர்த்தம் தந்தாய்..
அருகே இல்லாவிட்டாலும்
தொலைந்து விடாதே-
காரணங்கள் ஏதுமில்லையெனினும்
யாருமில்லா இரவுகளில்
துணையிருக்கிறது
கண்ணீரும் தனிமையும்
-