✍🏻Mekala Rathinachinaiya  
433 Followers · 43 Following

read more
Joined 13 April 2019


read more
Joined 13 April 2019

விடியலில் மலரும்
ஒவ்வொரு பூவும் சொல்கிறது
ஆதவன் வரும் முன்
அயர்ச்சியை நீக்கு
அவனொளி படுகையில்
புதிதாய் பிறப்பெடு

-



அருகில்
அமர்ந்தவர்
அடுத்த நிறுத்தத்தில்
இறங்கும் முன்
லேசாக ஒரு புன்னகை,
மேலோட்டமாக
இரண்டு வார்த்தைகள்,
செய்தித்தாள் பரிமாற்றம்
என ஒரு சிறிய
தற்காலிக நட்புதான்
ரயில் சிநேகம் எனினும்
சில நேரங்களில் அதுகூட
மறக்க முடியாத அனுபவம் தரும்

-



ஆட்டங்கள் என்பது
இன்றா நேற்றா
பரமனும் ஆடினான்
பரந்தாமனும் ஆடினான்
பார்வதி தேவியும் ஆடினாள்
கோபம் தாபம்
மகிழ்ச்சி ஆனந்தம் என
உணர்வுகள்
உச்சம் பெறும் நேரங்களில்
இவர்களும் ஆடட்டுமே
முறையாக நல்லதிற்காக மட்டும்

-



Flowers are
always beautiful
and fragrant,
giving coolness
to the eyes and
peace to the mind.

-



தொலைந்த உறக்கத்தைத்
துரத்தி துரத்தி பிடிக்க நினைத்து
விடியலைத் தொடும் இரவுகள்
மட்டுமல்ல அன்றைய பகலும்
மன அமைதியற்று
ஏதும் செய்ய இயலாமல்
வீணே கழிகிறது

-



பெரும்பான்மையான
எழுத்தாளர்களும்(கவிஞர்களும்)
சிநதனையாளர்களும்
நிலவை தேடும் ஆம்பல்கள்தான்
இரவு நேரங்களில்தான்
இவர்களின் சாதனைகள்
உருவாகிறது

-



ஏதோ ஒரு அமைதிதான்
அவ்வப்போது
என்னை ஆட்கொண்டுவிடுகிறது
அப்படியான நேரங்களில்
எழுத்தாள்வதும்
எனக்கு எளிதாகிறது.

-



தெய்வம் தந்த பூவே
புகைப்படங்கள் அழகுதான்
எதிர் கால மலரும்
நினைவுகள்தான்
அதற்காக உன்னை
இப்படி கஷ்டபடுத்த விடாதே
சுருணை போல சுருட்டி
திணித்து மடக்கி முறுக்கி
இன்றைய தினத்தில்
இவர்கள்தான் அரக்கர்கள்

-



ஒற்றை வார்த்தையில்
கவிதை ஒன்றை எழுதிபடித்தேன்
ஒளிர்கிறது உன் பெயர்.

-



வார்த்தை பெட்டிகளை
கோர்த்து வரிகளோட்டி வருகிறது
கவிதை ரயில்

-


Fetching ✍🏻Mekala Rathinachinaiya Quotes