✍🏻Mekala Rathinachinaiya  
427 Followers · 42 Following

read more
Joined 13 April 2019


read more
Joined 13 April 2019

நடக்கும் தொலைவு
எதுவாயினும் அது
உன்னோடு இருக்கட்டும்

-



உன் கரம் கோர்த்து
பயணிக்க எனக்கு
நடைபாதையும்
பஞ்சு மெத்தைதான்

-



நீ ஆடும் சதுரங்கத்தில்
ஒருபோதும் என்னை நீ
பகடைகளாக்காதே

-



கனவுகள் இல்லாமல்
இரவுகள் கழியலாம்
கொண்ட இலக்குகள்
கடப்பதில்லை

-



கனவில் நீ வர
தினமும் நான்
விரைவில்
உறங்கி விடுகிறேனடி!

-



தடைகள் கிழித்து
நடைகள் போட
விடைகள் கிடைத்து
படைகளையும் வெல்லலாம்

-



நான் வாசிக்க விரும்பும் புத்தகம்
நான் வாசிக்க தொடங்கிய போது
நானே வந்தியத்தேவனாகிய
கல்கியின் பொன்னியின் செல்வன்
ஆனால் சமீப காலமாக
நானே எழுதி நானே வெளியிட்டு
நாலுபேர் மகிழ்ந்து பாராட்ட
நாம் அப்படி என்னதான் எழுதியிருக்கிறோம் என
வாசித்து பார்க்க வேண்டும்

-



வானும் கடலும் சேர
தேவையென்னவோ?
இருப்பதொரு
தொடுவானம்தான்!

-



கனவு புத்தகத்தில்
காப்பி ரைட்டோடு
கவிதைகளை வெளியிட
காலமெல்லாம்
கனவு காண்கிறேன்
காலம்தான் கடக்கிறது
கணக்கற்று எழுதினாலும்
கனவிற்கு உதவியில்லை.
கால் பங்கை கேட்கின்றனர்
காசு கொடுத்து
கவிதை போட
கால் பக்கம் எனக்காம்!

-



கண்களில் படும்
காட்சிகளும்
மனதில் எழும்
கேள்விகளும்
சிந்தனை வட்டத்தில்
சிக்கும் போது அங்கு
எண்ண ஓட்டம் ஒரிடத்தில்
நிலை பெற்று ஏதோ ஒரு
வடிவம் அடைந்த பிறகே
மீண்டும் தன் ஓட்டத்தை
தொடர்கிறது.

-


Fetching ✍🏻Mekala Rathinachinaiya Quotes