விடியலில் மலரும்
ஒவ்வொரு பூவும் சொல்கிறது
ஆதவன் வரும் முன்
அயர்ச்சியை நீக்கு
அவனொளி படுகையில்
புதிதாய் பிறப்பெடு-
YouTube channel :Mekala's Rangoli Series
https://www.youtube.co... read more
அருகில்
அமர்ந்தவர்
அடுத்த நிறுத்தத்தில்
இறங்கும் முன்
லேசாக ஒரு புன்னகை,
மேலோட்டமாக
இரண்டு வார்த்தைகள்,
செய்தித்தாள் பரிமாற்றம்
என ஒரு சிறிய
தற்காலிக நட்புதான்
ரயில் சிநேகம் எனினும்
சில நேரங்களில் அதுகூட
மறக்க முடியாத அனுபவம் தரும்-
ஆட்டங்கள் என்பது
இன்றா நேற்றா
பரமனும் ஆடினான்
பரந்தாமனும் ஆடினான்
பார்வதி தேவியும் ஆடினாள்
கோபம் தாபம்
மகிழ்ச்சி ஆனந்தம் என
உணர்வுகள்
உச்சம் பெறும் நேரங்களில்
இவர்களும் ஆடட்டுமே
முறையாக நல்லதிற்காக மட்டும்-
Flowers are
always beautiful
and fragrant,
giving coolness
to the eyes and
peace to the mind.-
தொலைந்த உறக்கத்தைத்
துரத்தி துரத்தி பிடிக்க நினைத்து
விடியலைத் தொடும் இரவுகள்
மட்டுமல்ல அன்றைய பகலும்
மன அமைதியற்று
ஏதும் செய்ய இயலாமல்
வீணே கழிகிறது-
பெரும்பான்மையான
எழுத்தாளர்களும்(கவிஞர்களும்)
சிநதனையாளர்களும்
நிலவை தேடும் ஆம்பல்கள்தான்
இரவு நேரங்களில்தான்
இவர்களின் சாதனைகள்
உருவாகிறது-
ஏதோ ஒரு அமைதிதான்
அவ்வப்போது
என்னை ஆட்கொண்டுவிடுகிறது
அப்படியான நேரங்களில்
எழுத்தாள்வதும்
எனக்கு எளிதாகிறது.-
தெய்வம் தந்த பூவே
புகைப்படங்கள் அழகுதான்
எதிர் கால மலரும்
நினைவுகள்தான்
அதற்காக உன்னை
இப்படி கஷ்டபடுத்த விடாதே
சுருணை போல சுருட்டி
திணித்து மடக்கி முறுக்கி
இன்றைய தினத்தில்
இவர்கள்தான் அரக்கர்கள்-
ஒற்றை வார்த்தையில்
கவிதை ஒன்றை எழுதிபடித்தேன்
ஒளிர்கிறது உன் பெயர்.-
வார்த்தை பெட்டிகளை
கோர்த்து வரிகளோட்டி வருகிறது
கவிதை ரயில்-