விடிந்தபின்பு தேடுகிறேன்
உன் நினைவில் தொலைந்துவிட்ட
என் உறக்கத்தை !!!
-
வார்த்தையின் வலி
கை தவறி விழுந்த
கண்ணாடி துகள்கள்
சிதறியது போல ....
அவன் சிதறிய
சில வார்த்தைகளை
என் இதயத்தில்
கீறலாய்
சிதறிய துகள் ஒரு போதும்
இணைவதும் இல்லை ....
அவன் தூற்றிய
வார்த்தைகளை என்
இதயத்தில் என்றுமே
மறக்கபோவதும் இல்லை ....
-
தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே ..
உன் நினைவுகள் எப்போதும்
எனை தலைகோதியும்
தழுவிக்கொண்டும் இருப்பதால்-
சுழலும் உலகம் சுழன்று செல்ல....
வாடிய மலரை போல
அடுப்பங்கரையிலும் ,நான்கு மதிலுக்குள்ளும்...
பூட்டிய சிறையில் மாட்டிய மீனாய்
இவளது நாட்கள் இன்றும் மாறவில்லை....
-
வார்த்தைகள் கைவிட
வெட்கம் நம்மை கட்டி போட
பார்த்தும் பாராமல்
பேசியும் பேசாமல்
மௌனத்தில் கரைந்து போன
நம் முதல் சந்திப்பு தான்.-
ஆயிரம் ஆயிரம் உறவுகள் அழகாக
தோன்றினாலும்
என் உயிராக உன் நினைவுகள்...
காலத்தால் அழியாத உன் முதல் பார்வை👀💕...
உன் குரலில் நான் முட்டாளாகி விடுகிறேன்....💕💖-
அன்பு என்ற ஒன்றை நீ அடைய வேண்டுமானால்
காதல்💞 என்ற ஓர் உணர்வை அறிய வேண்டும்...😍😘🤗❣️-
கவலைகளை தன்னுள் மறைத்து
போலியாக புன்னகைப்பவன்..
அன்பு காட்ட தெரியாதவனல்ல
அன்பு காட்ட நேரமில்லாதவன்..
மற்றவர்களின் சந்தோஷத்திற்காக
மாடுபோல் உழைப்பவன்..
தனக்கென வாழாது குடும்பத்திற்கென வாழம்ஒவ்வொரு ஆண்களும் மதிக்கத்தக்கவர்கள் ...
ஆண்கள் தின வாழ்த்துக்கள்-
ஒரு மணி நேர அழைப்புகளில் 📱
தொடங்கிய காதல் 💖
இன்று 1️⃣ நிமிடம்
பேச கூட நேரமில்லையாம்
அவனுக்கு
#இவ்வளவுதான் காதல்-