நம்மைவிட்டு விலகாத
ஒரு உறவையாவது
நம் வாழ்நாளில்
சேர்த்துவைத்திருக்க வேண்டும்!!!-
♥️ வசிக்குமிடம் மாம்பழ நகரம்
♥️ நிறைய புத்தகங்கள் படிப... read more
நீ என் உறக்கமானால்
தினமும் சொர்க்கத்திலிருப்பேன்,
உன் நெஞ்சில் தலைசாய்த்து
உன் இதயதுடிப்பின் தாலாட்டை
கேட்டுக்கொண்டே உறங்க வேண்டும்!!-
உன் வருகையை எதிர்ப்பார்த்து
காத்திருக்கிறேன், என் இறுதி மூச்சு உள்ள வரை நிச்சயமாக
காத்திருப்பேன் என்றாவது
ஒரு நாள் ஒரு பைத்தியக்காரி
நம்மை காதலித்தாலே உயிரோடு
இருக்கிறாளா என்று நியாபகம்
வந்தால் ஒருமுறை அழைத்திடு
கண்டிப்பாக ஓடிவந்து ஒருமுறை
உன்னை பார்த்துவிடுகிறேன்!!!-
நம்மால் இப்படி பம்பரம்
போல் சுற்றமுடியும் என்று
காலை பரபரப்பான வேளையில்
தான் தெரிகிறது 5 மணிக்கு
எழுந்து 8 மணிக்குள்
அனைவரும் கிளம்பும்போது
தான்தெரிகிறது, இது அனைத்து
தாய்மார்களுக்கு மட்டுமே தெரியும்,
வீட்டு வேலைகள் அனைத்தும்
முடித்து குழந்தைகளை
ரெடிப்பண்ணி சாப்ட வைத்து
அவளும் அலுவலகம் கிளம்பும்
பரப்பரப்பு சொல்லி புரிய வைக்க முடியாது!!!-
பல ஆயிரம் வலிகள் கொண்ட
பெண்ணுக்குதான் தெரியும்,
அமைதி தான் அவளுக்கு சரியான
ஆறுதல் என்று!!!!-
உன்னை தேடுகிறேன்,
இப்பூமியில் எங்கு
இருக்கிறாய் என்று,
வாழ்வில் எப்போதும்
யாரை தொலைத்துவிட
கூடாது என்று
நினைக்கிறோமோ
அவர்கள்தான் நம்மைவிட்டு
முதலில் தொலைந்து
போகிறார்கள்!!!-
உணவின் சுவை
என்பது கைப்பக்குவத்தில்
உள்ளது!!
(The best chef in the world is my mom)-
எழுதிய வரிகளெல்லாம்
அழகிய வடிவம் பெற்று கவிதை ஆனது, எழுதிய நானோ
உடைந்து நொறுங்கி போகிறேன்,
நானே அழிந்தாலும், இந்த கவிதை யாரோ ஒருவரால்
இவ்வுலகில் வலம் வரும்!!!-
என்னைவிட்டு போகாதே
என்று உன்னிடம் மட்டும்
கெஞ்சுகிறேனே,
யாரிடமும் எதையும்
எதிர்ப்பார்க்காத நான்
உனக்காகவும், உன்
அன்புக்காகவும்
ஏங்கி தவிக்கிறேனடா!!!-