நான் சிறுவயதில் நட்டு வைத்த தென்னைமரங்கள் என் கனவில் வந்து கதறின., காதை மூடிக்கொண்டேன். எண்ணெய் ஆலையும் சுரங்கமும் வெடித்து என் சினேகிதியின் அப்பா உடல் கருகி செத்துப்போனார் , நான் கண்களை மூடிக்கொண்டேன். காடுகளில் வேட்டையாடும் corporate கள் என் பிரியமான உயிர்களைக் கொன்று வீசின, நாற்றத்தால் நான் மூக்கை மூடிக்கொண்டேன்.. நாளை EIA2020 என்னையும் கொள்ளப்போகிறது.. எதை மூடுவது என்று தெரியவில்லை.
சாலையோரம் செத்துக்கிடக்கும் நாயின் பிணவாடையில், இறப்புச் செய்திகளை மாற்றும் அலைவரிசையில்.. இன்னும் சொல்லவே இல்லாத காதலின் கற்பனைகளில், இறைவன் வருவான் என உயிர்த்திருக்கும் உடல்களில்..
நிலவுக்கும் தென்றலுக்கும் இடையில், மேல் மாடத்தில் நின்று பேசிக்கொண்டு.. மேகம் அவள் நிறத்தாலே பதில் கூறுவாள். சில முறை அழுது தீர்த்துக் கொட்டி ஆர்ப்பரித்து விடுவாள்.. நான் மௌனம் பேசி முடித்த பின்பு
அகதிக் குழந்தை தெருப்பூனைக்கு பகிரும் பாலில், கண் இழந்தவனின் குழல் இசை இனிமையில், முதிர்கன்னி தீட்டுகிற காதல் கவிதையில், நாடோடி உடன் ஓடும் நாயின் துருதுருப்பில், முட்கள் கொண்ட ரோஜாவின் ஈடற்ற எழில் முகத்தில்..