பின்னிரவில் மனதில் அமைதி அலை வீசுகிறது. அலை பாயும் மனம் அடங்கிப்போகிறது. யாராக இருந்தாலும் எளிதில் நம்பி விடுகிறேன். மேகங்கள் இறைக்கும் நீர்த்துளிகள் போல உள்ளத்தில் உள்ளதை அள்ளி அடுத்தவரிடம் கொட்டிவிடுகிறேன். இரவில் நடத்தும் பேச்சு வார்த்தையின் போது ஏன் இந்த இரவு இன்னும் கொஞ்சம் நீளக்கூடாதா என்று தோணும். இன்பத்திற்கு காரணம் தேவைப்படுகிறது. துன்பத்திற்கு காரணம் தேவைப்படுகிறது.. ஆனால் ஏனோ அமைதிக்கு அமைவதில்லை ஒரு காரணமும்.. நடு இரவிலும் நட்சத்திரங்களிலும் கண் மூடிய இமைகளிலும் காற்றில் அசையும் இலைகளிலும் இறைவன் அமைதியை ஒளித்து வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்துக்கொண்டேன்... காதலுக்கும் இரவுக்கும் அமைதிக்கும் ஏதோ ஒரு முக்கோண பிணைப்பு இருக்கும் என்றே தோன்றுகிறது... மூன்றையும் ஒன்றாய் அனுபவித்த அனுபவங்கள் பல உண்டு... இந்த நிகழ் காலம் நின்று விட வேண்டும் இந்த இன்பமான எண்ணத்திலே...
-