மழைத்துளி
யுகங்கள் கடந்து பயணிக்கும்
மேகங்கள் மோகம் கொண்டு
கனப்பொலுதில் கண்ணாமூச்சி ஆட மண்வாசனை பரவி
சாரலது சட்டென்று ! "ஒய்ந்தது ஒய்யாரமாக"
விடுமுறை என நான் நினைக்க.
வாகை சுடி வானுள் மறைந்தாயே !
தவழ்ந்தே நீ முடிக்க, தானம் செய்தன
"துளிகள்"
-
தாய் மொழி
" தரணியது"தோண்றும் முன்பே!
"தமிழ் தாய் "அவள் அவதரித்தாள்,
"தாயகி" அவள் திகழ்ந்தாள் !
"செம்மொழிப்" பண்பு கொண்டு,
தொல்காப்பியத்தில் "இலக்கியம்" படைத்தாள்
இலக்கணங்கள் வகுத்தே. "இளகிய" நடைக்கொண்டாய் !
"திருக்குறளை" தான் கொடுத்து "வாழ்வியலின்"ஆழத்தை ஆடைந்தாய் !
உலக மொழிகளின் தாயாக
உயர்நிலை கன்டாய் !!-
கடிதம்
தீராத பக்கத்தித்தை
தீண்டாத எழுதுகோலாய்
காற்றில் பறக்கும் பட்டமாய்
மனம் திறந்து எழுதிவே,
கனவேனக் கரைந்தே
கரைகளைக் கடக்க
கடிதம் எழுதினேன்.....
-
கடிதம்
விழி வழி பேசும் மொழியில்
கவி மழை பொழிந்திட
நேரம் இல்லை...
கடிதம் கொண்டு "கலைஞனாக"
நினைத்தால்,வார்த்தையின் விளிம்பில்,
நீர் குமிழிபோல
ததும்பியச் சொற்கள் "தந்திரமாகத்' தொலைந்தன ..... தேவையின் தேடலை "தேடியேஅழைந்தபடி"
-
தாய்மை வரம்
கருவறையில் கனவுகள் கொண்டு
பிஞ்சு விரல் சேர்த்து
சின்னஞ்சிறு பாதம் கொண்டு "சிறகுகளாய்"நீ உதைக்க
அழுகுரல் அதனை கேட்டு என் "உதிரம்" கொண்டு உன் 'பசி"அடக்குவேன்!
விந்தையாய் நீ பேச,வியந்தே நான் ரசிக்க "தாய்மொழி" நீ பேசி "தாய்"என
தான் என்று ஆவேனோ !!-
அத்தை
அத்தை மடி மைத்தையடி என்று நீ பாட பக்குவமாய் நான் உறங்க,
அப்பன் அவன் அடித்தாலும் அத்தையாய் நீ தடுக்க,
அத்தனையும் நீ கொடுக்க
அத்தை என்று நான் அழைக்க மருமகன் என மலர்ந்தாயே !
-
பெண்மை
தவழந்து தூரிகையாய்
விழி மொழி பேசும் ஒவியமே
தகப்பனவனின் "தாயும்மானவளே"
"கன்னி "என்னும் மஞ்சம் கன்டு
மங்கையாய் 'மாங்கல்யம்"கொண்டு
தாயாகி "பெண்மை" நிறையக் கண்டவளே உன் புகழ் உறைக்க
"கவிதை" அல்ல "காவியம்" படைப்பேன்...-
தாய் மாமா
தாய்வழி தனில் தரனியில் வந்தாய்
முறையதனை "முதலில்"செய்தாய் சினுங்கினாலும் "சினம்"கொன்டாய்
பாசத்தை பதுக்கியே பழகினாய்
தாவியே உன்னை அனைத்தேன் என் "தந்தையாய்"-
தாய் மாமன்
தாயவளின் தமயனவன்
தாங்கிப்பிடிக்கும் "தந்தையவன்"
தரம்பார்காத "தங்கமவன் "
தாய் வழி வந்த "உதிரமவன்"
பாசத்தின் வானத்தில் "பாரம் சுமப்பவன்_என்"தாயுமானவன்"......அவனே என் "தாய் மாமன்"-
மழழை வரம்
அழகோவியமாய் நீ சிரிக்க
"அம்மா" என்றழைக்க
பிஞ்சுக் கைகள் இதழோரத்தில்
வர்ணம் தீட்ட சின்னஞ்சிறு
சினுங்கள் சினுங்கி உன்
மழழை சொல்லில் மூழ்கியே தத்தளிக்கத் "தாய்மையுடன்" உன்னை
என்று சுமப்பேனோ!......-