நீங்கள், நடுநிலையாகவும், சரிசமமாகவும், நியாயமாகவும் இருப்பீர்கள் என்றால், இந்த சமூகத்தின் அம்புகள் முதலில் உங்களைத்தான் குறிவைக்கும்!!!
-
"இன்று மழை காரணமாக விடுமுறை"
என்ற செய்தி கேட்டதும் துள்ளிக்குதிக்கும் குழந்தைகளோடு,
தானும் குதித்து குழந்தையாய் கொண்டாடுகிறார்கள்,
வீதிகளை எல்லாம் சுத்தம் செய்யும் கிழட்டு குழந்தைகள்!!!!-
மண்ணாய்ப்போன மனிதர்கள்
-------------------------------------------------
வன்மத்தையும், கோபத்தையும் மட்டுமே பெரிதென பேசுகிறார்கள்!!!
வாழ தெரியாதவர்கள்!!!
குறைகளையும் குற்றங்களையும் புறம் பேசுகிறார்கள்
நிறையான வாழ்வின் வாசம் அறியாதவர்கள்!!
வெறுப்பை உமிழந்து கொண்டிருக்கிறார்கள்
அன்பின் ருசி அறியாதவர்கள்!!
காலம் தந்த வாழ்வினை
வாழத்தெரியாத இந்த விசமிகளை
மண்ணும் உரமாய் ஏற்க்குமோ, மரணத்திற்கு பிறகு!!!-
மடையர்களும் மண்ணாங்கட்டிகளும்
----------------------------------------------------------
வாழாதவர்களும், வாழத்தெரியாதவர்களும்,
வாழ முடியாதவர்களும், வாழ்வை புரியாதவர்களும், வாழ்கையை போதிக்கிறார்கள்!!!
முட்டாள்களும், மடையர்களும், மண்ணாங்கட்டிகளும் அறிவுரை என்ற பெயரில் அதிகாரத்தை திணிக்கிறார்கள்!!!
காற்றிலாடும் மலர்களை ரசிப்பதற்கும்,
அதை பிடுங்குவதற்கும் எத்தனை வேறுபாடுகள்!!!-
அன்பிற்குரியவர்களின் உதாசினங்களும்,
கோபத்தின் வார்த்தைகளும்
நம்மை தூர விலக்கி நிறுத்தி வைத்து விடுகிறது.....
சிதைந்த பின்பு கண்ணாடி மீள்வதில்லை....
முகத்தின் அழகை மீண்டும் அது காட்டுவதில்லை.....
-படித்ததில் பிடித்தது--
சிறுவயதின் ஆடை சுதந்திரத்தோடு
மழையில் நனைவதைப்போன்றது,
அன்பினை உணருவது!!!
ஆணவம் எப்போதும், சன்னல் திரையில்
அன்பினை ரசிக்க வைத்துவிட்டு
வீட்டின் சிறையில் பாதுகாப்பாகவே வைத்திருக்கிறது!!!-
தோழில் அழகாய் அமர்ந்த பட்டாம்பூச்சியை துரத்திவிட்டு, யாரிடம் உங்கள் அன்பை தேடுகிறீர்கள்!!!
(பூக்களும் - மனிதர்களும்)-
புரிதல் இல்லாதவர்கள் சொல்லித்தந்த மிகப்பெரிய பாடம் யாருக்காவும் உன் வாழ்கையை இழந்துவிடாதே
-
சமூகம் ஒரு சாக்கடை
----------------------------------------
அமைதியாக நகர்ந்துபோ, வலித்தால் தாங்கிக்கொள்
முடியவில்லை என்றால், சிறிது நேரம் தனிமையில் அழுதுக்கொள்!!!
எவரேனும் கேட்டால் சின்ன சிரிப்புடன் சொல்லிப்போ
"ஏனப்பா எப்டி இருக்க - எனக்கென்ன நல்லா இருக்கேன்"
ஆறுதல் வேண்டாம், அடைக்களமும் வேண்டாம்
அமைதியாக நகர்ந்துபோ!!!
ஒவ்வொரு விடியலும் சொல்லித்தரும், தைரியமாக இரு என்று!!!
ஒவ்வொரு இரவும் சொல்லித்தரும், நம்பிக்கையோடு இரு என்று!!!
காலத்தின் காற்று அது வீசும், அது உன் வாழ்கையின் பாய்மரத்தை நகர்த்திச்செல்லும்!!!
ஒரு நாள் கரைசேரும், அப்போதும் பேசுவார்கள்!!!
"நல்ல மனுசன்யா, நம்பவே முடியல"
"அந்த கடவுள் இருக்கானா இல்லையா"
ஏன்னா, -- சமூகம் ஒரு சாக்கடை-
கடந்து போக தெரியாதவர்கள்
சிக்கிக்கொள்கிறார்கள்!!!
கடந்து போக தெரிந்தவர்கள்
அடுத்த வலிகளுக்கு தயாராகிறார்கள்!!!-