மை இல்லா
பேனாவுடன்
காத்திருக்கிறேன்
மாலை நேரத்தில்.
உன் கண் மையினை
கடனாக கொடுப்பாயா?
வார வட்டியாக
கவிதையை
கொடுத்து விடுகிறேன்.😜
-
மழையில் மலையேற
Mask அணிந்து
Morning முதலே
காத்திருக்கிறது...
என் BIKE..🏍️🚴-
ஆக்சிஜனால்
துருப்பிடித்து
அனுதினமும்
அவதிப்படும்
என் இரும்பு இதயத்தினை,
உன்
காந்த
கண்களால்
கவர்ந்து
காப்பாற்றிவிடடி
என் கண்மணியே.!!!-
இன்றோ கவிதை நாளா...
நீயோ காகித நூலா...
உன் மனதோ பசுவின் பாலா...
நீயோ எந்தன் ஆளா?
Answer கூறவும் அலைபேசியில்..😜-
வாயாடி..
உன் கூந்தலோ
மலர் உற்பத்தியில் முதலிடமா?
உன் மூச்சுக் காற்றோ
மனம் வீசிடும் விசித்திரமா?
உன் முகமோ
வாசனையின் வசிப்பிடமா?
உன் கண்களோ
என் இதயத்தின் வாழ்விடமா?
விடை கூறடி
என் வாயாடி!!!
-
விற்பனையாகாத
விளைபொருளாக
வீழ்ந்து மடிந்தாலும்...
வீரியமுள்ள விதைகளாக
விரைந்தெழுவோம்
விடிவதற்குள்...
இனி
ஒளிரும் பலரின் உலகம்
ஒழியும் சிலரின் கலகம்....-
வசந்த காற்றும்.
வாடைக் காற்றாக வீசுகிறது..
விசிறியில்லா வினாடிகளில்
விளையில்லா
உன் - வியர்வை துளிகளை
வருடிய பிறகு...-
வார்த்தைகளுக்கு
வர்ணம் தீட்டும்
வாயாடியே..
உன் நாவிலிருந்து
மூவார்த்தையை பெற்றேன்
போராடியே..-
கவிகள் நான்காக
பிரிந்தாலும்,
கரும்புகள் நாளடைவில்
முறிந்தாலும்,
நம் காதலானது;
காலம் உள்ளவரை கலையாது; கண்மணியே...-