அன்று ஒரு காலத்தில்...
அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு என்று
வீட்டினுள் முடங்க வைக்கப்பட்ட பெண்கள்..
இன்று எல்லாத் துறைகளிலும்
தன்னால் எதுவும் முடியும் என
சிறந்து உயர்ந்து விளங்குகிறார்...
பெண்ணால் முடியாது என்று பொறாமையோடு
செய்தவர்களின் வாதம் இன்றைய காலத்தில்
ஒழிந்து போனது என்றே நினைத்தேன்...
நினைத்தது தவறென உணர்த்தியது
மதிப்பான நல்ல சர்க்கார் பணி பெற்றும்
"போயும் போயும் பெண்பிள்ளை இந்த வேலைக்கா??
இது கடினமல்லவா.. உன்னால் முடியுமா மா..."
என்ற அன்பு உறவினர் சிலரது வார்த்தைகள்...
இது அக்கறையா?? பொறாமையா??...
அப்படி கடினம் உணராத பணி ஒன்று உள்ளதா??
அரசு வேலை பெருவதையே
பலர் லட்சியமாக வைத்து வலிகள் பல மறைத்து
வாழ்வின் நல்வழிகள் பெற்றிட போராடுகின்றனர்..
அப்படிப்பட்ட போராட்டம் வெற்றி அடையும் போது
வாழ்த்த மனம் வராவிட்டாலும்
ஏளனம் பேசாமல் இருப்பது நல்லது...
-