இதுவரை உன்னிடம் பேசியதில்லை நான்
புன்னகை ஏதும் பரிமாறிக் கொண்டதில்லை
அட அதற்கும் மேலாக
உனக்கு என்னை தெரியாமல் கூட இருக்கலாம்
இருந்தும்
என் கண் நிறைந்து
வழிந்தோட காத்திருக்கும் நீர்த்துளி
உன் ஒற்றை நினைவினால்
வறண்டு போகிறது என்றால்
உனக்கும் எனக்குமான பந்தம் என்ன?
-