வாழ்த்துசொல்லாவிடினும்
உதறி தள்ளி
உதாசீனம்
செய்யாதீர்கள் ...
அவளின் (அன்னையின்)
இறுதிக்காலத்தில்...
உரு கொடுத்து
தன் உதிரத்தில் காத்து
உயிர் தந்தவளை....
-
போனால் ...
சிலரின்
நனவுகள்
காலாவதி ஆககூடும்...
நெஞ்சில் சுமந்த வரை
கனவிலும் காண
முடியாத ஏக்கத்தில்....
-
நம்மை உள்ளிழுத்து
கொள்வதற்கு முன்
விழித்து கொண்டால்
தப்பித்து கரை சேர்ந்து
விடலாம் எவ(யா)ராக
இருப்பினும்....-
இன்றும்
எழுதியாச்சு
கவிதைகள் நான்கோ
ஐந்தோ இல்லை ஆறோ
இவளுக்கு பிடித்தவாறு...
அது உங்களுக்கும்
பிடிக்கும் என்றே.....-
சிட்டு குருவிகள்
பறந்து செல்வதை
பார்க்கத்தான் ஆசை
முடிகிறதா என்ன
அதி உயரமாக
ஆங்காங்கே
முளைத்து விட்ட
நெட்வொர்க் டவர்களால்...-
புரியாத புதிராகவே
சிலரின் கதாபாத்திரங்கள்...
புரிந்துகொள்ள
முயற்சி செய்யும் முன்...
முற்று பெற்று விடுகிறது
அந்த கதாபாத்திரங்களின்
அத்தியாயங்கள்....
-
ஐந்தோடு
ஆறாக பிறந்தாலும்...
இறுதிக் கட்டத்தில்
கட்டையில்
போவதென்னவோ
ஒற்றையில் தான்...
அதை அறி(புரி)யாதவர்களே
அடித்து கொள்கிறார்கள்
நான் நீ என என்னை மிஞ்ச யாருமில்லை என்று...
-
மாறாதது....
காற்றடைக்கப்பட்ட
பலூனாகவே நம்
உயிர் துடிப்பு ...
அது கால நேரம்பார்த்து
அடங்குவதும்
இயங்குவதும்
இறைவனின் தீர்ப்பு...-