இரவு பகல் பாராமல் உறவுகளை பிரிந்து கண் விழித்து நம் நாட்டை காக்கும் வீரர்களுக்கு .... தன்னால் முடிந்த மகிழ்ச்சியை தருகிறது மலர்ந்திருக்கும் இம்மலர்கள்... பூத்து குலுங்கி கண்ணுக்கு இதமாக நறுமணம் பரப்பி மனதிற்கு சற்று பதமாகவே.....
வேண்டிய இவளை மறந்து விட்டாயே பழகிய நாட்களை மறந்து... இது நியாயமா சொல் நீயே.. வேறென்ன செய்ய முடியும் உன்னிடத்தில் கேள்விகள் கேட்பதை தவிர இவளின் இயலாமை தனத்தால்....
பேர் கூட தெரியாமல் பழகும் நட்புகள் ... நாளடைவில் பழகிய பின்... எதையும் எதிர்பாராமல் வருகிறது உதவி என்றதும் ஓடோடி... அனைத்தும் அறிந்த உறவுகள் தான் உதறி விட்டு போகிறது எந்த ஒரு நல்ல காரியங்களுக்கும் கலந்து கொள்ளாமல் உப்பு சப்பில்லாத காரணங்களை கூறிக்கொண்டு....
சற்று நேரத்தில் விடிந்து விடும் எண்ணத்தில் .... தன் தனிமையை கலைக்க பறவை கூட்டங்களை ஏக்கத்துடன் எதிர்பார்த்தே காத்திருக்கிறது... தனித்து விடப்பட்ட இந்த ஒற்றை மரம்...