இன்பத்திலும் இன்பமாம்
கனவிலும் அவனோடு
ஒட்டிக் கொண்டு
உறவாடுகிறது
இவளின் நெஞ்சம்....-
போன மச்சான்
திரும்ப வந்தான்
வெறுங்கூடாகி
போன பின்னாலே !
ஒத்தை ரோசா வை
எங்கு சூடிட
மண்டை ஓட்டிலும்
முடியில்லையே !
காத்திருப்பேன்
காலம் முழுவதும்
என்பதை
தவறாக புரிந்து
கொண்டானோ ?
கட்டை விழுந்த பின்
காதலிக்க ஆசையாம் ;
கூட்டுக்கிழவனுக்கு
எலும்பெல்லாம் பல்லு ,
யப்பா ! தாங்கலப்பா
இவன் லொல்லு !
இனி வளர்மதி வயசுக்கு வந்தா என்ன ?
வராட்டா என்ன ?
அட போயா அங்கிட்டு ,
இத்தனை காலம் வப்பாட்டி கூட
சல்லாபம் பண்ணிட்டு ,
மண்டைஓடு தெரிஞ்ச பின்னே
காதலாம் காதல் ....
" ம்ஹ்ம் "-
இழந்த நேரங்கள்
சிதிலமடைந்தன ;
இருக்கும் நாட்களை
காத்திட வாடா !
காத்திருப்புக்கள்
பாசி படர்ந்தன ;
கண்ணீர் காய்ந்தன
ரேகைகளாக ,
பட்டு உதிர்வதற்குள்
உன் விரல் தீண்டியே
மோட்சம் தர நீ வாடா !
பாலையாய் மாறிய
என் நினைவுகளை மீண்டும்
பூத்திட வேண்டும் வாடா !-
நட்சத்திர மின்னல்களை
அவள் விழிகளில்
காணும் வரை
காதல் என்றால்
என்னவென்றே
அறிந்திறாத ஜடமாய்
திரிந்தேன் ;
கண்டுகொண்டேன்
காதலை இன்றவள்
கண்களுக்குள்ளே !
சிக்கி கொள்ள ஆசைதான்
அவள் மனக்கூட்டினுள்ளே !!-
விழிகளின் தேடல்
விடைபெற ஏங்குது
விரல்களின் தவிப்பு
துணைவிரல்களை நாடுது
இதழ்களின் ஆசை
முத்தங்களை கேட்குது
என்னவனே நீ வரவே
இன்பமும் அலையுதே !!-
கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்கிறாளாம்
காதலை ;
தள்ளி நின்று
கட்டிக் கொண்டாலும்
தொடுவது அவளெனில்
கட்டுப்பட தான்
முடியுமோ ?!-
இதயக் கூட்டில் புது இலக்கணம்
எழுதிவிட்டாய் ;
இவள் காவியம் படைத்திட
இனி தடையேதடா ?-
அவனை அடைகாத்து
வைத்திருக்கும்
என் இதயத்தை
அலங்கரித்தது
அவனுடைய காதல் ;
ஒவ்வொரு முறையும்
மலர்ந்து மலரச் செய்து...-