உயிர் பறவை...
(வரிகள் 👇கீழே)-
கவித்தென்றல் சு.பாமா🥀
(✍️சு. பாமா🥀)
928 Followers · 1.6k Following
Lyricist, Poet,
Joined 25 December 2020
10 FEB 2022 AT 0:20
'நீ' மொத்த தமிழ்
எழுத்துக்களில்
பிடித்தது எது வென்றாய்...
உடனே 'நீ' என்றேன்...
உன்னையே சொல்லி
நான் விட்டதாய்
குரூர திருப்தி எனக்குள் . 💕— % &-
9 FEB 2022 AT 23:51
கற்பனைக் கடலில்
மிதக்கிறேன் - எனினும்
ஒன்றாவது விற்பனையாகி
ஈடேற்றம் காணாத
கானல் நீர் தான் --நான் — % &-
9 FEB 2022 AT 23:25
நிமிடந் தோறும் உன்
திருமுகம்
இதயக் கண்ணாடியில்
வந்தாடுமே
அப்போது
தனிமை என்னை பிடித்து
பந்தாடுமே?
என்னை தின்னும்
உயிர் வலியே
நீ தான் என் முகவரியே.. ❣️— % &-
9 FEB 2022 AT 23:14
ஒவ்வொரு தடவையும்
மிக சுவாரஷ்யமாக
ஆரம்பிக்கப்படும்
என் வாழ்க்கை நாவலின்
"இறுதி அத்தியாயங்கள்" மட்டும்
எப்போதும் கரையான்
தின்றதாகத்தான்...
இருந்தும் அதை நான்
ரசிக்க தவறியதே இல்லை..!!!— % &-