மட்டும்..
தொலைவாகி போகும்
உனக்கு அலையென்று
பெயர் வைத்தது யார்....!-
இரவை ஆளுமை
செய்ய
இளையராஜாவின்
இசையல்லாது போனால்..
நிலவும் நினைவும்
தடுமாறிபோய்விடும்
அல்லவா..!-
மலை உச்சியிலும்
மலர் வனத்திலும்
மௌனம் சாதித்துவிட்டு
கடலின் கரை தொட்டவுடன்
கவிதை சொல்வதென்பது
காற்றுக்கே உரித்தானதொரு
கைவந்த கலை...!-
மௌனத்தை களைக்கத்தான்
சொற்கள் வேண்டும்..
மனதை களைக்க
சிறு மௌனம் போதும்....!-
வானம் தினமொரு
நிறம் பூசுவதில்லை..
நிலா தினமொரு
முகம் காட்டுவதில்லை..
கடல் தினமொரு
கரை தேடுவதில்லை...
மனதின் கதியும்
அப்படித்தான்....!-
பிரியத்திற்கென்று
சில எழுதா விதிகள் உண்டு..
அது சொல்வதை மட்டுமல்ல
சொல்ல வந்து சொல்லாமல்
போனவற்றையும்
கண் முன் நிகழ்த்திக் காட்டும்....!-
கண்ணீர் நிறைந்த
விழிகளோடும்..
காலம் தந்த
காயங்களோடும்..
ஒவ்வொரு முறையும்
உன்காலடியில்
வந்து விழுகிறேன்..
என் சிறகில் தைத்த முட்கள்
ஒவ்வொன்றையும்...
அவ்வளவு லாவகமாக..
கையாள்வதோடு..
குருதி வழிந்தோடும்
என் காயங்களின் மேல்
பிரியத்தின் எச்சில் தொட்டு
தடவி..
அன்பென்னும் அமுதூட்டி
என்னை உயிர் பிழைத்திருக்க செய்வது
உன் பிரியம் மட்டும் தான்....!
-
நாட்பட்ட ரணம்
என்பதற்காக..
வலிக்காமலில்லை..
அதுவும்
ஊணோடு
ஒன்றிப்போனது
அவ்வளவு தான்....!
-
நினைவுகள்..
நினைவுகளாகவே
சுவாசத்தின்
அடி ஆழத்தில்
தங்கி விட்டால்கூட
பரவாயில்லை..
அப்படியல்லாமல்
அது ஒரு இளையராஜாவின்
பாடலாக மாறி
கண்ணுக்கு புலப்படி
காற்றில் மிதந்து வந்து
மனதை தட்டி
மௌனம் கலைத்தால்
நானென்ன செய்வேன்.....!
_🪶....
-
நிலவை காணும்
பொழுது
நானுன்னை
நினைப்பது போல்
நீயும் என்னை..
நினைத்துக் கொள்வதில்
இருக்கிறது
என்னிறைவு....!
-